Published : 20 Sep 2025 10:33 AM
Last Updated : 20 Sep 2025 10:33 AM
சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 என உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு ரூ.60 என தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 என இன்று உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.
அந்த வகையில் கடந்த 16-ம் தேதி அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.82,240 என்ற விலையில் விற்பனையானது. இந்த சூழலில் தற்போது தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.20) கிராம் ஒன்றுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.480 என உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.82,320-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.89,800 என விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.68,160-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.145-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, ரூ.1,45,000-க்கு விற்பனை ஆகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT