Published : 17 Sep 2025 06:54 AM
Last Updated : 17 Sep 2025 06:54 AM

சென்னை ரயில்வே கோட்டத்தில் முதன்முறையாக மின்சார ஆட்டோக்களை சரக்கு ரயிலில் அனுப்பி சாதனை

சென்னை: சென்னை ரயில்வே கோட்​டத்​தில், முதன்​முறை​யாக புதிய மின்​சார ஆட்​டோக்​களை சரக்கு ரயி​லில் ஏற்றி அனுப்பி வைத்து சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சரக்கு பயணம் மூல​மாக ரயில்​வேக்கு ரூ.18.75 லட்​சம் வரு​வாய் கிடைக்​கும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தெற்கு ரயில்​வே​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில், சரக்கு ரயில் போக்​கு​வரத்தை மேம்​படுத்த, கடந்த 2020-ம் ஆண்​டுக்கு பிறகு பல்​வேறு முயற்​சிகள் எடுக்​கப்​பட்​டன. குறிப்​பாக, நவீன வசதி​கள் கொண்ட சரக்கு ரயில்​கள் அறி​முகப்​படுத்​தல், சரக்​கு​களை கையாளுவதற்கு ஏற்ற ரயில் நிலை​யத்தை அமைத்​தல், வணிக மேம்​பாட்டு குழு அமைத்​தல் போன்ற நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்​து, சரக்கு ரயில் போக்​கு​வரத்து வேக​மாக வளரத் தொடங்​கியது. தற்​போது, சென்​னை​யில் இருந்து நாட்​டின் பல நகரங்​களுக்கு சரக்கு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்​நிலை​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் முதன்​முறை​யாக, புதிய மின்​சார ஆட்​டோக்​களை சரக்கு ரயி​லில் ஏற்றி அனுப்பி சாதனை படைக்​கப்​பட்​டது.

மான்ட்ரா எலக்ட்​ரிக் (முரு​கப்பா குழு​மம்) நிறு​வனத்​தால் தயாரிக்​கப்​பட்ட மின்​சார ஆட்​டோக்​கள், சரக்கு ரயி​லில் ஏற்றி ஆந்​திரா மாநிலம் தடா ரயில் நிலை​யத்​திலிருந்து, மேற்​கு​வங்​கம் மாநிலம் ரங்​க​பாணிக்கு நேற்று அனுப்பி வைக்​கப்​பட்​டன.

இது குறித்​து, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​தாவது: இதன்​மூலம், சரக்கு வர்த்​தகத்​தில் ஒரு புதிய அத்தியாயத்தை சென்னை ரயில்வே கோட்​டம் தொடங்​கி​யுள்​ளது. மேலும் இது, மின்​சார வாக​னங்​களை பெரிய அளவில் ரயில் மூலம் கொண்டு செல்​வதற்​கான வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​கிறது. ஒவ்​வொரு சரக்கு ரயில் போக்​கு​வரத்​தின் மூல​மும் ரூ.18.75 லட்சம் வரு​வாய் கிடைக்​கும்.

நடப்பு நிதி​யாண்​டில் 8 சரக்கு ரயில்​களை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், ரூ.1.50 கோடி ரயில்​வேக்கு வரு​வாய்கிடைக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சாலை வழிப் போக்​கு​வரத்​துடன் ஒப்​பிடும் போது, ரயில் மூலம் மின்​சார வாகனங்களைக் கொண்டு செல்​வ​தால், கரியமில வாயு வெளி​யேற்​றத்தை கணிச​மாகக் குறைக்​கிறது. இதன்​மூலம், ரயில்வே நாட்​டின் பசுமைப் போக்​கு​வரத்து சேவை​யாக தனது பங்​கை உறு​தி செய்​கிறது. இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x