Published : 17 Sep 2025 08:45 AM
Last Updated : 17 Sep 2025 08:45 AM

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் அவகாசம் நீட்டிப்பு ஏன்?

புதுடெல்லி: ​நடப்பு ஆண்​டுக்​கான வரு​மான வரி கணக்கு தாக்​கல் செய்ய ஜூலை 31 வரை கால அவ​காசம் வழங்​கப்​பட்​டது. பல்​வேறு தரப்​பினரின் கோரிக்​கையை ஏற்று இந்த அவகாசம் செப்​டம்​பர் 15-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது.

கடைசி நாளான நேற்று முன்​தினம் ஆயிரக்​கணக்​கானோர் வரு​மான வரித் துறை இணை​யதளத்​தில் தங்​களின் கணக்கை தாக்​கல் செய்ய முயன்​றனர். இதன்​காரண​மாக இணை​யதளம் முடங்​கியது.

இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களில் ஏராள​மான பதிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. காலஅவ​காசத்தை நீட்​டிக்க கோரிக்கை விடுக்​கப்​பட்​டது. இந்த சூழலில் வரு​மான வரி கணக்கை தாக்​கல் செய்ய மேலும் ஒரு​நாள் அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டது. இதன்​படி கடைசி நாளான நேற்று ஏராள​மானோர் வரு​மான வரி கணக்கை தாக்​கல் செய்​தனர்.

இதுகுறித்து மத்​திய நேரடி வரி​கள் வாரிய வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக வரு​மான வரி கணக்கை தாக்​கல் செய்ய ஒரு நாள் அவகாசம் நீட்​டிக்​கப்​பட்​டது. இது​வரை 7.3 கோடி பேர் கணக்கை தாக்​கல் செய்​துள்​ளனர். காலஅவ​காசம் நிறைவடைந்த பிறகும் வரு​மான வரி கணக்கை தாக்​கல் செய்​ய​லாம்.

இதன்​படி ரூ.5 லட்​சத்​துக்​குள் வரு​மானம் இருந்​தால் ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​படும். அதற்கு மேல் வரு​மானம் இருந்​தால் ரூ.5,000 அபராதம் விதிக்​கப்​படும். டிசம்​பர் 31-ம் தேதிக்கு பிறகு வரு​மான வரி கணக்கை தாக்​கல் செய்​தால் ரூ.10,000 அபராதம் வி​திக்​கப்​படும். இவ்​வாறு வாரிய வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x