Published : 13 Sep 2025 06:43 AM
Last Updated : 13 Sep 2025 06:43 AM

நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் பத்திரிகைகளின் விற்பனை 2.77 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: ஆடிட் பீரோ ஆஃப் சர்க்​குலேஷன்ஸ் (ஏபிசி) என்​பது நாட்​டில் உள்ள செய்​தித்​தாள்​கள் மற்​றும் பத்​திரி​கை​களின் விற்பனை எண்​ணிக்​கையை தணிக்கை செய்து சான்​றளித்து வரும் லாப நோக்​கற்ற அமைப்பு.

பத்​திரிகை விற்​பனை எண்​ணிக்​கையை சரி​பார்த்​து, நம்​பக​மான தகவல்​களை விளம்​பர​தா​ரர்​களுக்​கும் பொது​மக்​களுக்​கும் ஏபிசி வழங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில் ஏபிசி நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 2.77 சதவீத அளவுக்கு பத்​திரிகை விற்பனை அதி​கரித்​துள்​ளது. இதன்​மூலம் நம்​பக​மான, சரி​பார்க்​கப்​பட்ட, ஆழமான செய்​தி​கள், தகவல்​களைப் பெற வாசகர்​கள் தொடர்ந்து செய்​தித்​தாள்​களை நம்​பு​கிறார்​கள் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை பத்​திரிகை விற்​பனை2,97,44,148 ஆக உள்ளது. இதுகடந்தாண்டை விட 2.77 சதவீத வளர்ச்​சி​யாகும். இது அச்சு ஊடகக் தொழில்​துறை​யின் ஆரோக்​கிய​மான வளர்ச்சியை பிர​திபலிக்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x