Published : 12 Sep 2025 11:44 AM
Last Updated : 12 Sep 2025 11:44 AM
சென்னை: தங்கம் விலை இன்று (செப்.12) மேலும் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.81.920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை மேலும் உயர்ந்து, நாள்தோறும் வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது.
அந்த வகையில், கடந்த 6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பின்னரும் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கும் பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு பவுன் ரூரூ. 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT