Published : 06 Sep 2025 09:57 AM
Last Updated : 06 Sep 2025 09:57 AM

அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

புதுடெல்லி: இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி, ஆயத்த ஆடைகள், தங்க நகைகள், ரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள், ரசாயனங்​கள், இன்​ஜினீயரிங் பொருட்​கள் உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​களுக்​கான ஆர்​டர்​கள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏற்​றும​தி​யாளர்​கள் நெருக்​கடிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

இந்நிலையில், மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஏற்றுமதியாளர்களுக்கு மத்​திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்​வேறு அம்​சங்​களில் கவனம் செலுத்​து​வ​தாக இருக்கும்.சிறு ஏற்​றும​தி​யாளர்​கள் எதிர்​கொள்​ளும் பணப்​புழக்க பிரச்​சினை​களை நிவர்த்தி செய்​தல், செயல்பாட்டு மூலதனத்​தின் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தல், ஏற்​றுமதி தொடர்​புடைய துறை​களில் வேலை பாது​காப்பை உறுதி செய்​தல், புதிய சந்தை வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தி, உற்​பத்தி தடைப​டா​மல் இருக்​கச் செய்​தல் என பல்​வேறு விஷ​யங்​களில் கவனம் செலுத்​தும்.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட நிவாரண உதவி​களை போன்று இது இருக்​கும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்​நாட்டு நுகர்வை அதி​கரிக்​கும் வகை​யில் மத்​திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்​படுத்​தி​யுள்ள நிலை​யில் தற்​போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x