Published : 06 Sep 2025 01:12 AM
Last Updated : 06 Sep 2025 01:12 AM

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்​தும், அவ்​வப்​போது சற்று குறைந்​தும் வரு​கிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.78,440-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. 4-ம் தேதி விலை சற்று குறைந்​து, ஒரு கிராம் ரூ.9,795-க்​கும், ஒரு பவுன் ரூ.78,360-க்​கும் விற்​கப்​பட்​டது.

இந்நிலையில், ஆபரணத் தங்​கம் விலை நேற்று கிரா​முக்கு ரூ.70, பவுனுக்கு ரூ.560 அதி​கரித்​தது. இதனால், 22 காரட் தங்​கம் ஒரு கிராம் ரூ.9,865-க்​கும், ஒரு பவுன் ரூ.78,920-க்​கும் விற்​பனை​யாகி புதிய உச்​சத்தை அடைந்​துள்​ளது.

24 காரட் சுத்த தங்​கம் விலை ஒரு கிராம் ரூ.10,761, ஒரு பவுன் ரூ.86,088 என்ற அளவில் இருந்​தது. வெள்ளி விலை கிரா​முக்கு ரூ.1 குறைந்து ரூ.136-க்​கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1.36 லட்​சத்​துக்​கும் விற்​பனை​யானது.

இதுகுறித்து தங்​கம், வைர நகை வியா​பாரி​கள் கூறும்​போது, ‘‘சர்​வ​தேச அளவில் டாலர் மதிப்​பு, தங்​கம் விலை​ உயர்ந்​திருப்​ப​தால் உள்​நாட்​டி
லும் தங்​கம் விலை உயர்ந்​துள்​ளது. வரும் நாட்​களில் மேலும் விலை உயரவே வாய்ப்பு உள்​ளது’’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x