Published : 03 Sep 2025 08:37 AM
Last Updated : 03 Sep 2025 08:37 AM

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம் சிப்’ அறிமுகம்: செமிகண்டக்டர் ஒரு டிஜிட்டல் வைரம் என பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: பொருளா​தார சுயநலம் காரண​மாக பல்​வேறு தடைகள் இருந்​த​போ​தி​லும், இந்​தி​யா​வின் மொத்த உள்​நாட்டு உற்​பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத​மாக உயர்ந்​துள்​ளது என பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்​பின் வரி விதிப்பு குறித்து மறை​முக​மாக விமர்​சிக்​கும் வகை​யில் பிரதமர் இவ்​வாறு பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

டெல்​லி​யில் மூன்று நாட்​கள் நடை​பெறவுள்ள செமி​கான் இந்​தி​யா-2025 மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

சில நாட்​களுக்கு முன்​பாகத்​தான் இந்த ஆண்​டின் முதல் காலாண்​டுக்​கான மொத்த உள்​நாட்டு உற்​பத்தி தரவு​கள் வந்​துள்​ளன. மீண்​டும் ஒரு​முறை இந்​தியா ஒவ்​வொரு எதிர்​பார்ப்​பை​யும், ஒவ்​வொரு மதிப்பீட்​டை​யும் விஞ்சி சிறப்​பாக செயல்​பட்​டுள்​ளது. பொருளா​தார சுயநலத்​தால் உரு​வாக்​கப்​பட்ட சவால்​கள் காரண​மாக உலக பொருளா​தா​ரங்​கள் ஆட்​டம் கண்​டுள்​ளன. இந்த நிச்​சயமற்ற சூழ்​நிலை​யிலும் இந்​தியா 7.8 சதவீத வளர்ச்​சியை சாத்​தி​ய​மாக்​கி​யுள்​ளது கவனிக்​கத்​தக்​கது.

இந்​தி​யா​வின் தற்​போதைய பொருளா​தார வளர்ச்சி வேகம் நீடித்​தால் உலகின் மூன்​றாவது பெரிய பொருளா​தா​ர​மாக மாறு​வதற்​கான கனவு விரை​வில் நிறைவேறும்.

20-ம் நூற்​றாண்​டைப் பொருத்​தவரை​யில் நிலக்​கரி மற்​றும் கச்சா எண்​ணெய் வளம்​தான் அசைக்​க​ முடியா சக்​தி​யாக இருந்து அதனை வடிவ​மைத்​தது. ஆனால், 21-ம் நூற்​றாண்​டின் உண்​மை​யான சக்தி செமிகண்​டக்​டர்​கள் தான்.

கடந்த நூற்​றாண்​டில் உலகின் தலை​விதி எண்​ணெய் கிணறுகளுடன் பிணைக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போதைய நூற்​றாண்​டின் தலை​விதி என்​பது சிறிய சிப்​பில் குவிந்​துள்​ளது. அளவில் சிறிய​தாக இருந்​தா​லும் உலகின் முன்​னேற்​றத்தை வேக​மாக இயக்​கும் வலிமை அதில் பொ​திந்​துள்​ளது. இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படும் சிப் ஒரு நாள் உலகின் மிகப்​பெரிய மாற்​றத்​துக்​கான சக்​தியை அளிக்​கும்.

நாம் தாமத​மாகத் தொடங்​கி​னாலும் இப்​போது நம்மை எது​வும் தடுக்க முடி​யாது என்​பதே உண்​மை. இந்​தி​யாவை உலகம் தற்​போது மதிக்​கிறது, நம்​பு​கிறது. இந்​தி​யா​வுடன் சேர்ந்து செமிகண்​டக்​டர் எதிர்​காலத்தை உரு​வாக்க உலகம் தயா​ராக உள்​ளது. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

விக்​ரம்​-32 சிப்: செமி​கான் இந்​தியா மாநாட்​டின் நேற்​றைய தொடக்க விழா​வின்​போது முற்​றி​லும் உள்​நாட்​டில் உரு​வாக்​கப்​பட்ட விக்​ரம்​-32 பிட் சிப்பை பிரதமர் மோடி​யிடம் மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்பு துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் வழங்​கி​னார்.

அப்​போது, “எண்​ணெய் கருப்பு தங்​கம் என்​றால், செமிகண்​டக்​டர் ஒரு டிஜிட்​டல் வைரம்” என்று பிரதமர் மோடி தெரி​வித்​தார்.

விக்​ரம்​-32 சிப் விண்​வெளிப் பயணங்​களுக்​காக முழு​மை​யாக உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட 32-பிட் மைக்​ரோபி​ராசசர் ஆகும். இது ராக்​கெட் ஏவுதல் மற்​றும் விண்​வெளி சூழல்​களின் தீவிர தன்​மை​களை தாங்​கும் வகை​யில் சண்​டிகரில் உள்ள இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி அமைப்​பின் (இஸ்​ரோ) செமிகண்​டக்​டர்​ ஆய்​வகத்​தால்​ வடிவ​மைப்பு செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x