Published : 02 Sep 2025 09:08 AM
Last Updated : 02 Sep 2025 09:08 AM

சிஇஓ பதவி மறுக்கப்பட்ட நிறுவனத்தை ரூ.20,000 கோடிக்கு வாங்கிய பெண்

புதுடெல்லி: எந்​தவொரு துறை​யிலும் உயர் பதவியை பிடிக்க விடா​முயற்சி இருந்​தால் அது சாத்​தி​ய​மாகும் என்​பது ஜூலியா ஸ்டீவர்ட்​டின் வாழ்க்​கையி​லிருந்து உறு​தி​யாகி உள்​ளது.

1990-களின் பிற்​பகு​தி​யில் ஆப்​பிள்பீ நிறு​வனத்​தில் பணி​யாற்​றியபோது அவர் ஒருபோதும் தலைமை செயல் அதி​காரி​யாக வரமுடி​யாது என்று கூறப்​பட்​டது. அந்த நிறு​வனத்தை கடுமை​யான உழைப்​பின் மூலம் லாபகர​மான பாதைக்கு அழைத்து சென்​றபோதும் அவருக்கு உயர் பதவி மறுக்​கப்​பட்​டது. இதனால், அந்த நிறு​வனத்​திலிருந்து வெளி​யேறிய அவர் அதன் போட்டி நிறு​வன​மான ஐஎச்​ஓபி கேஷுவல் டைனிங்​கில் இணைந்து கடுமை​யாக பணி​யாற்றி தலைமை நிர்​வாகி​யா​னார். அதன்​பின்​னர் அந்த நிறு​வனத்​தில் கடுமை​யாக உழைத்த அவர் தான் வேலை​பார்த்த ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கும் அளவுக்கு உயர்ந்​தார். 2.3 பில்​லியன் டாலருக்கு (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.20,000 கோடி) ஆப்​பிள்பீ நிறு​வனத்தை வாங்​கிய ஜூலியா தனக்கு சிஇஓ பதவியை வழங்​காத முதலா​ளியை அந்த நிறு​வனத்தை விட்டே நீக்​கினார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்​றுக்கு ஜூலியா அளித்த பேட்​டி​யில், “ஆப்​பிள்பீ நிறு​வனத்​தில் பணி​யாற்​றியபோது அதனை லாபகர​மாக மாற்​ற​முடிந்​தால் சிஇஓ பதவி வழங்​கப்​படு​வ​தாக உறு​தி​யளிக்​கப்​பட்​டது. நான் நிராகரிக்​கப்​பட்​ட​தால் எனது பதவியை ராஜி​னாமா செய்து ஐஎச்​ஓபி-ல் இணைந்து பிராண்டை வளர்ச்சி பாதைக்கு திருப்​பினேன். ஆப்​பிள்பீ 2.3 பில்​லியன் டாலரு​கக்கு வாங்​கப்​பட்​டது. தலை​மைப் பொறுப்​பில் இரு​வர் தேவை​யில்லை என்​ப​தால் முன்​னாள் முதலா​ளியை பத​வியி​லிருந்​து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x