Published : 02 Sep 2025 08:28 AM
Last Updated : 02 Sep 2025 08:28 AM

கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 12.6 பில்லியன் டாலர்களை சேமித்த இந்தியா

புதுடெல்லி: கடந்த 39 மாதங்​களாக ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை இந்​தி​யா, இறக்​குமதி செய்​துள்​ள​தால் சுமார் 12.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை சேமித்​துள்​ளது. ரஷ்​யா, உக்​ரைன் இடையே​யான போர் தொடங்​கியதைத் தொடர்ந்து ரஷ்​யா​விட​மிருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெயை இந்​தியா குறைந்த விலை​யில் வாங்கி பயன்​படுத்தி வரு​கிறது.

அதே​நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா எண்​ணெய் வாங்​கக் கூடாது, ஏனெனில் அது அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளா​தார ரீதி​யில் உதவு​கிறது என்று அமெரிக்கா குற்​றம் சாட்டி வரு​கிறது. ஆனால், இந்​தியா தனது சொந்த எரிசக்தி பாது​காப்​பை​யும், மக்​களின் நலனை​யும் கருத்​தில் கொண்டே இந்த முடிவை எடுத்​த​தாக வாதிட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் கடந்த 39 மாதங்​களாக இந்​தி​யா, ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​துள்​ள​தால் 12.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை சேமித்​துள்​ள​தாக தகவல்​கள் வெளிவந்​துள்​ளன. ரஷ்​யா​வின் கச்சா எண்​ணெயை வாங்க இந்​தியா முன்​வ​ரா​விட்​டால், உலகளா​விய கச்சா எண்​ணெய் விலை கணிச​மாக உயர்ந்​திருக்​கும்.

மேலும், இது இந்​தி​யா​வின் எண்​ணெய் இறக்​கும​திக்​கான செல​வையும் பல மடங்கு உயர்த்​தி​யிருக்​கும். இந்​தி​யா, கச்சா எண்​ணெய் இறக்​கும​தியை அதி​க​மாக நம்​பி​யிருப்​ப​தால் மத்​திய அரசுக்கு அதனால் அதிக செலவு ஏற்​பட்​டிருக்​கும் என்று பொருளா​தார வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

ரஷ்​யா​விலிருந்து எண்​ணெய் இறக்​குமதி செய்​யும் விஷ​யத்​தில் அமெரிக்கா அழுத்​தம் கொடுத்​த​போதும், குறைந்த விலை கச்சா எண்​ணெய் காரண​மாக இந்​தியா அதற்கு அடிபணி​ய​வில்லை என்று தெரிய​வந்​துள்​ளது. அமெரிக்​கா​வின் உத்​தர​வுக்கு கீழ்​படி​யத் தேவை​யில்லை என்​பதும், எந்த நாட்​டுடன் வர்த்​தகத்​தில் ஈடு​பட​வேண்​டும் என்​ப​தில் தெளி​வான கொள்​கை​யை​யும் இந்​தியா பின்​பற்றி வருவதாக அந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x