Published : 01 Sep 2025 05:01 AM
Last Updated : 01 Sep 2025 05:01 AM

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: இண்டிகோ நிறுவனம் ஆர்வம்

புதுடெல்லி: அ​தி​கரித்து வரும் நிச்​சயமற்ற வர்த்தக சூழல்​களுக்கு மத்​தி​யில் அரசி​யல் உறவு​களை மீண்​டும் கட்​டி​யெழுப்​பும் முயற்​சி​யாக 5 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்​தி​யா​வும் சீனா​வும் நேரடி விமான சேவை​களை மீண்​டும் தொடங்க முடிவு செய்​துள்​ளன.

சீனா​வின் தியான்​ஜினில் நடந்த ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின்​போது சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்த பிரதமர் நரேந்​திர மோடி இதற்​கான திட்​டத்தை அறி​வித்​தார். ஆனால் எப்​போது விமான சேவை​கள் தொடங்​கும் என்​பது குறித்த விவரங்​களை அவர் வழங்​க​வில்​லை.

இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதிப்பை அமல்​படுத்​தி​யுள்ள நிலை​யில், ஏழு ஆண்​டு​களுக்​குப் பிறகு முதன்​முறை​யாக பிரதமர் மோடி சீனா​வுக்கு பயணம் மேற்​கொண்​டார். உலகள​வில் அதிக மக்​கள் தொகை கொண்ட இந்​தியா மற்​றும் சீனா​வுக்கு வரி விதிப்பை அமெரிக்கா அமல்​படுத்​தி​யுள்​ள​தால் இரு​நாடு​களின் பொருளா​தா​ரத்​தி​லும் நிச்​சயமற்​ற தன்மை அதி​கரித்​துள்​ளது. இந்த சூழ்​நிலை​யில், நீண்ட கால போட்​டி​யாளர்​களான சீனா மற்​றும் இந்​தி​யா​வுக்கு இடையி​லான ராஜதந்​திர உறவு​கள் வலுப்​பெற்று வரு​கின்​றன.

அதன் ஒருபகு​தி​யாக ஆகஸ்ட் மாத தொடக்​கத்​தில் புதுடெல்​லி​யில் இருதரப்பு வெளி​யுறவு அமைச்​சர்​களுக்கு இடையே வர்த்​தகம், முதலீடு தொடர்​பான பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. சீன வெளி​யுறவு அமைச்​சர் வாங் யீ பிரதமரை​யும் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது நிலை​யான முன்​னேற்​றத்​துக்கு ஒரு​வருக்​கொரு​வர் நலன்​களை மதிக்​கும் வகை​யில் வழிநடத்​தப்​படு​வதற்கு அவர் பாராட்டு தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய விமான நிறு​வன​மான இண்​டிகோ, சேவை​கள் அனு​ம​திக்​கப்​பட்​ட​வுடன் 2 நாடு​களுக்​கும் இடையே விமானங்​களை இயக்க விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. மற்​றொரு விமான நிறு​வன​மான ஏர் இந்​தி​யா​வும் இந்த வழித்​தடத்​தில் மீண்​டும் வி​மானங்​களை இயக்​கும் என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x