Published : 29 Aug 2025 07:14 AM
Last Updated : 29 Aug 2025 07:14 AM

இந்தியா 2038-ல் 2-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும்: எர்ன்ஸ்ட் அன்ட் யங் அறிக்கையில் தகவல்

புதுடெல்லி: வரும் 2038-ல் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக இந்​தியா உரு​வெடுக்​கும் என எர்ன்​ஸ்ட் அன்ட் யங் வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எர்ன்​ஸ்ட் அன்ட் யங் ஆகஸ்ட் மாதம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வின் வலு​வான பொருளா​தார கட்​டமைப்​பு, சாதக​மான மக்​கள் தொகை மற்​றும் தொடர்ச்​சி​யான தொழில் துறை சீர்​திருத்​தங்​கள் ஆகியவை நீண்​ட​கால வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தாக உள்​ளன. குறிப்​பாக, அதிக இளைஞர் சக்தி (சராசரி வயது 28.8), பொது​மக்​களின் அதிக சேமிப்பு மற்​றும் முதலீட்டு விகிதம், அரசின் கடன் மற்​றும் ஜிடிபி இடைவெளி குறைந்து வரு​வது, சீரான பொருளா​தார வளர்ச்சி ஆகியவை இந்​தி​யா​வுக்கு சாதக​மான அம்​ச​மாக பார்க்​கப்​படு​கிறது.

இந்​தியா இப்​போது 4.19 ட்ரில்​லியன் டாலர் ஜிடிபி​யுடன் (வாங்​கும் சக்தி அடிப்​படை​யில்) உலகின் 4-வது பெரிய பொருளா​தார நாடாக உள்​ளது. இது விரை​வில் 3-வது பெரிய பொருளா​தார நாடாக உரு​வெடுப்​பதுடன், 2030 வாக்​கில் 20.7 ட்ரில்​லியன் டாலரை எட்​டும். வரும் 2030 வரை​யில் இந்​தி​யா​வின் ஜிடிபி சராசரி​யாக ஆண்​டுக்கு 6.5% ஆகவும் அமெரிக்​கா​வின் ஜிடிபி 2.1% ஆகவும் இருக்​கும் என ஐஎம்​எப் கணித்​துள்​ளது. இது 2030-க்கு பிறகும் தொடர்ந்​தால், வரும் 2038-ம் ஆண்​டுக்​குள் அமெரிக்​காவை பின்​னுக்​குத் தள்ளி இந்​தி​யா​வின் ஜிடிபி 34.2 ட்ரில்​லியன் டாலரை எட்டி உலகின் 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக உரு​வெடுக்​கும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x