Last Updated : 28 Aug, 2025 11:01 AM

 

Published : 28 Aug 2025 11:01 AM
Last Updated : 28 Aug 2025 11:01 AM

சற்றே உயர்ந்த தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.9,405-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக.28) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை ஆகிறது.

தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கின்றனர். அதன் காரணமாக தங்கத்தை ஆபரணமாகவும் மற்றும் காசுகளாகவும் மக்கள் வாங்குவது வழக்கம். உலக அளவில் தங்கத்தை அதிகம் வாங்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.

அமெரிக்க தேசம் இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய தேசத்தின் வர்த்தக துறையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.9,405-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.75,240-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.82.080-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.62,200-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.130 என விலையில் மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,30,000 என விற்பனை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x