Published : 26 Aug 2025 07:12 AM
Last Updated : 26 Aug 2025 07:12 AM

பிரதமர் மோடி - பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: மூன்று நாள் சுற்​றுப் பயண​மாக இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபு​கா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது இரு​நாடு​களுக்​கிடை​யில் பாது​காப்​பு, வர்த்​தகம் தொடர்​பான 7 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா மற்​றும் பிஜி​யின் கடல்​கள் வேறு​பட்​டிருக்​கலாம். ஆனால், எங்​களின் விருப்​பங்​கள் ஒரு படகில் பயணிக்​கின்​றன. பாது​காப்பு உள்​ளிட்ட இருதரப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு பரந்த செயல்​ திட்​டத்தை உரு​வாக்​கிட இந்​தி​யா​வும், பிஜி​யும் உறு​திபூண்​டுள்​ளன.

இரு நாடு​களும் பாது​காப்​பான மற்​றும் வளமான இந்​தி​ய-பசிபிக் பிராந்​தி​யத்தை ஆதரிக்​கின்​றன. பிரதமர் ரபுகா இந்​தி​யா​வுக்கு முதன்​முறை​யாக வருகை தந்​துள்​ளார். அவரிடம் நடத்​தப்​பட்ட பேச்​சு​வார்த்​தையை தொடர்ந்து பல்​வேறு துறை​களில் ஒத்​துழைப்பை ஏற்​படுத்​து​வதற்​காக இருதரப்​பினரும் ஏழு ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டுள்​ளனர். பாது​காப்பு துறை​யில் பரஸ்பர ஒத்​துழைப்பை வலுப்​படுத்த நாங்​கள் முடிவு செய்​துள்​ளோம். இதற்​கான செயல்​ திட்​டம் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

பிஜி​யின் கடல்​சார் பாது​காப்பை வலுப்​படுத்த தேவை​யான பயிற்சி மற்​றும் உபகரணங்​களை இந்​தியா வழங்​கும். பரு​வநிலை மாற்​றம் பிஜி நாட்​டுக்கு மிகப்​பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது. பேரிடரை சமாளிக்க தேவை​யான அனைத்து உதவி​களும் இந்​தியா சார்​பில் வழங்​கப்​படும். இவ்​வாறு பிரதமர் கூறி​னார்.

கடல்​சார் பாது​காப்​புத் துறை​யில் பிஜி, இந்​தி​யா​விற்கு ஒரு முக்​கிய​மான நாடு. பசிபிக் பிராந்​தி​யத்​தில் சீனா தனது பலத்தை அதி​கரிக்க இடை​வி​டா​மல் முயற்​சிக்​கும் பின்​னணி​யில், பிஜி​யுடன் தனது பாது​காப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்கு இந்​தியா அதிக முக்​கி​யத்​து​வம்​ கொடுத்​து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x