Published : 22 Aug 2025 09:05 AM
Last Updated : 22 Aug 2025 09:05 AM

ஜிஎஸ்டி வரியில் 12, 28% வரம்பை நீக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை

புதுடெல்லி: கடந்த சுதந்​திர தினத்​தில் டெல்லி செங்​கோட்​டை​யில் இருந்து நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்பு நீக்​கப்​பட்டு வரி முறை எளி​தாக்​கப்​படும் என கூறி​னார். இந்​நிலை​யில் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க மாநில நிதி​யமைச்​சர்​கள் சென்​றுள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்​சர்​கள் குழு உறுப்​பினர்​களாக​வும் உள்​ளனர். அவர்​கள் ஜிஎஸ்டி வரி​யில் 12%, 28% வரம்​பு​களை நீக்​கு​வதற்கு பரிந்துரை செய்​தனர்.

இது ஜிஎஸ்டி கவுன்​சிலின் இறுதி பரிசீலனைக்கு செல்​கிறது. இந்த பரிந்​துரைக்கு ஜிஎஸ்டி கவுன்​சில் ஒப்​புதல் வழங்​கி​னால், ஜிஎஸ்டிவரி முறை​யில் 5% மற்​றும் 18% மட்​டுமே இருக்​கும். மற்​றவை நீக்​கப்​படும்.

இவற்​றுக்கு பதிலாக ஆடம்பர பொருட்​களுக்கு 40 சதவீத வரி முறை அறி​முகப்​படுத்​தப்​படலாம் என கூறப்​படு​கிறது. மாநிலத்துக்கான பங்​கீடு மற்​றும் வரு​வாய் இழப்​புக்​கான இழப்​பீடு குறித்த கேள்வி​களை ஜிஎஸ்டி கவுன்​சில் பரிசீலனை செய்​யும்.

மத்​திய அரசு அறி​வித்த 12%, 28% வரி நீக்​கம் திட்​டத்தை அனைத்து அமைச்சர்களும் பரிந்​துரைத்​தனர். சில மாநிலங்​கள் மட்​டும் சில கருத்​து​களை தெரி​வித்​தன. அவை ஜிஎஸ்டி கவுன்​சிலுக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ள​தாக பிஹார் துணை முதல்​வரும், ஜிஎஸ்டி அமைச்​சர்​கள் குழு ஒருங்​கிணைப்​பாள​ரு​மான சாம்​ராட் சவுத்​திரி தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x