Last Updated : 21 Aug, 2025 05:04 PM

1  

Published : 21 Aug 2025 05:04 PM
Last Updated : 21 Aug 2025 05:04 PM

வரி குறைப்பு: இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி முறைக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு முன்மொழிந்துள்ள இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த வெள்​ளிக்​கிழமை நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நாட்டு மக்​களுக்கு நற்​செய்​தி​யாக தீபாவளிக்​குள் பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி கணிச​மாக குறைக்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட்​டார். அதாவது குறைந்த பட்​சம் 5 சதவீதம், அதி​கபட்​சம் 18 சதவீதம் கொண்ட இரு அடுக்​கு​களாக ஜிஎஸ்டி வரியை சீர்​திருத்​தம் செய்ய மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்போது, ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக உள்​ளது. இதில், 12 சதவீத வரி விதிப்​பில் உள்ள பொருட்​களை 5 சதவீதத்​தின் கீழ் கொண்டு வரவும், 28 சதவீத வரி விதிப்​பில் உள்ள 90 சதவீத பொருட்​களை 18 சதவீத வரி​வி​திப்​புக்​குள் கொண்​டு​வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பொருட்​களின் விலை குறைந்து சாமானிய மக்​களுக்கு நிதி சுமையி​லிருந்து விடு​தலை கிடைக்​கும்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலால் அமைக்கப்பட்ட மாநில அமைச்​சர்​கள் குழு ஆலோசனை மேற்கொண்டது. மாநில அமைச்சர்கள் குழுவின் தலைவரும் பிஹார் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசின் புதிய திட்டத்தை ஏற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய சாம்ராட் சவுத்ரி, "ஜிஎஸ்டி வரி வகிதத்தில் உள்ள 12 சதவீதம் மற்றும் 28 சதவீதத்தை நீக்குவது என்ற முன்மொழிவை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இது குறித்து நாங்கள் விவாதித்தோம். மத்திய அரசின் முன்மொழிவுக்கு எங்கள் ஆதரவை அளித்துள்ளோம். இதனை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நாங்கள் பரிந்துரைப்போம். ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவை எடுக்கும்" என தெரிவித்தார்.

எனினும், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. செப்டம்பர் தொடக்கத்தில் கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்​சிலும் ஒப்​புதல் தரும்​பட்​சத்​தில் 2-அடுக்கு ஜிஎஸ்டி வரி​முறை நாடு முழு​வதும் அமலுக்கு வரும். இதன் மூலம், தீபாவளிக்கு முன்​ன​தாகவே பல்​வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x