Published : 21 Aug 2025 08:57 AM
Last Updated : 21 Aug 2025 08:57 AM

மியூச்சுவல் பண்ட் விநியோகத்துக்கு 1 லட்சம் தபால்காரர்களுக்கு பயிற்சி

புதுடெல்லி: இந்​திய மியூச்​சுவல் பண்ட் சங்​கம் (ஏஎம்​எப்​ஐ), இந்​தியா போஸ்ட் ஆகியவை ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளன. இதன்​மூலம் நாட்​டில் ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளித்து அதில் பொது​மக்​களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்​கப்​பட​வுள்​ளது. இதன்​படி பயிற்​சி​யைப் பெறும் தபால்​காரர்​கள், மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் என்று அழைக்​கப்​படு​வர்.

இதன்​மூலம் அவர்​கள் நாட்​டிலுள்ள சிறிய நகரங்​கள், கிராமப்​புறப் பகு​தி​களில் மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி, அந்​தத் திட்​டத்​தில் மக்​களைச் சேர்க்​கும் பணி​களைச் செய்​வர்.

இதுகுறித்து ஏஎம்​எப்ஐ அமைப்​பின் தலை​மைச் செயல் அதி​காரி வெங்​கட் நாகேஸ்வர் சலசானி கூறும்​போது, “ஒரு லட்​சம் தபால்​காரர்​களுக்கு மியூச்​சுவல் பண்ட் தொடர்​பான பயிற்சி அளிக்​கப்​படும். இதைத் தொடர்ந்து 4 மாநிலங்​களைத் தேர்வு செய்து அதி​லுள்ள ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் தலா 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் நியமனம் செய்​யப்​படு​வர். அடுத்த ஆண்​டில் அந்த மாநிலங்​களின் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் 10 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் இருப்​பர்’’ என்றார்.

பிஹார், ஆந்​தி​ரா, ஒடி​சா, மேகாலயா ஆகிய 4 மாநிலங்​களில் முதல்​கட்​ட​மாக இந்​தத் திட்​டம் அமல் செய்​யப்​படும். 4 மாநிலங்​களில் மொத்​தம் 20,000 மியூச்​சுவல் பண்ட் விநி​யோகஸ்​தர்​கள் இருப்​பர். இந்​தத் தபால்​காரர்​களுக்கு கூடு​தலாக பயிற்சி தேவைப்​பட்​டால், உதவி செய்ய சான்​றிதழ் பெற்ற மியூச்​சுவல் பண்ட் நிபுணர்​கள் குழு அமைக்​கப்​படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x