Published : 21 Aug 2025 05:53 AM
Last Updated : 21 Aug 2025 05:53 AM

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட 77% முதலீடுகள் செயல்பாட்டுக்கு வந்தன: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: இந்​தி​யா​வில் எந்த மாநிலத்​தி​லும் இல்​லாத அளவுக்கு தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட முதலீடு​கள் 77 சதவீதம் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ள​தாக அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அவருடன், தொழில்​துறை செயலர் அருண்​ராய் இருந்​தார். அப்​போது அமைச்​சர் கூறிய​தாவது: தமிழகத்தை நோக்கி நாள்​தோறும் பல்​வேறு திட்​டங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. பல புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி கொண்​டிருக்​கின்​றன. எந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​னாலும், அதன் பின்​னால் எவ்​வளவு முதலீடு​கள் வரு​கிறது என்​பதை பார்ப்​ப​தை​விட, எத்​தனை நபருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வா
கிறது என்​பதை பார்க்க வேண்​டும்.

கையெழுத்​தாகும் ஒப்​பந்​தங்​கள் செயலர்​கள் அடங்​கிய கமிட்டி மூலம் கண்​காணிக்​கப்​பட்​டு, அதற்​கான அனு​ம​தி​கள் உடனுக்​குடன் வழங்​கப்​படு​வ​தால் தமிழகம் தற்​போது வரலாற்று சிறப்​புமிக்க கன்​வெர்​சன் ரேட்டை பெற்று வரு​கிறது. கடந்த சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடரின் போது இந்​தி​யா​வில் எந்த பகு​தி​யும் காணாத அளவு 72 சதவீதம் செயல்​பாட்டு அளவை (கன்​வர்​சன் ரேட்) தமிழகம் பெற்​றுள்​ள​தாக தெரி​வித்​தேன்.

இந்​நிலை​யில் தற்​போது புதிய உச்​ச​மாக புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களின் செயல்​பாட்டு அளவு தமிழகத்​தில் 75 சதவீதத்தை தாண்​டி​யிருக்​கிறது. இது​வரை இந்​தி​யா​வில் எந்​தவொரு மாநில​மும் அடை​யாத ஒரு இலக்​காகும் இது. கடந்த 2024-ல் நடந்த முதலீட்​டாளர் மாநாட்​டில் மட்​டும் நாம்கையெழுத்​திட்ட 631 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​களில் 525 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் அதாவது 80 சதவீதம் நிறைவடைந்​துள்​ளன.

தொடர்ந்து ‘தமிழ்​நாடு எழுகிறது’ என்ற மாநாடு​களை மண்​டல​வாரி​யாக நடத்தி வரு​கின்​றோம். அதன்​படி சமீபத்​தில் தூத்​துக்​குடி​யில் நடந்த மாநாட்​டில் மட்​டும் 41 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மூலம் ரூ.32,554 கோடி முதலீடு​கள், 49,825 பேருக்கு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகி இருக்​கின்​றன. அடுத்​த​தாக ஓசூரில் ‘தமிழகம் எழுகிறது’ மாநாடு நடத்​தப்​பட​வுள்​ளது.

அந்​தவகை​யில் திமுக ஆட்சி பொறுப்​பேற்ற 2021-ல் இருந்து 2025 வரை ரூ.10.33 லட்​சம் கோடிக்கு முதலீடு​கள் ஈர்க்​கப்​பட்​டுள்​ளன. 77 சதவீத புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. செயல்​பாட்டு அளவுக்​குப்​பின் கிடைக்​கும் முதலீடு​களி​லிருந்து வரும் வேலை​வாய்ப்​பு​களும் நமது மக்​களுக்கே கிடைப்​ப​தற்​கான நடவடிக்​கை​யை​யும் தொடர்ந்து எடுத்து வரு​கிறோம். மதுரை​யில் கூட டைடல் பூங்கா கட்​டு​மான பணி​கள் முடிந்​த​பிறகு மேலும் வளர்ச்​சி​யடை​யும். தமிழகத்​தின் போட்டி மாற்ற மாநிலங்​களோடு இல்​லை. மற்ற நாடு​களோடுதான்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x