Published : 20 Aug 2025 06:09 AM
Last Updated : 20 Aug 2025 06:09 AM

அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: உள்​நாட்டு அலுமினிய உற்​பத்தி நிறு​வனங்​களைப் பாது​காக்க, வெளி​நாடு​களில் இருந்து மலி​வான விலை​யில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்​கள் இறக்​கும​தியை தடுத்து நிறுத்த வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு, இந்திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கம் வலி​யுறுத்​தி​உள்​ளது.

இது தொடர்​பாக, இந்​திய அலுமினிய உருக்கு உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜிதேந்​திர சோப்ரா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நாம் தின​மும் 30 நிமிடங்​களுக்கு ஒரு​முறை அலுமினிய பொருளைப் பயன்​படுத்​துகிறோம். படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை, கதவு என ஒவ்​வொன்​றி​லும் அலுமினியப் பொருட்​கள் உள்​ளன.

ஸ்கூட்​டர், கார், மெட்ரோ ரயில், பேருந்​து, ராக்​கெட் வரை எல்​லா​வற்​றி​லும் அலுமினியப் பொருள் உள்​ளது. இந்​தி​யா​வின் அலுமினிய உருக்கு சந்தை சீராக விரிவடைந்து வரு​கிறது. கடந்த ஆண்டில் 8.39 பில்​லியன் டாலரில் இருந்த இந்​திய சந்தை 2035-ல் 22.5 பில்​லியன் டாலரை எட்​டும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், சீனா, வியட்​நாம், கம்​போடி​யா, இந்​தோ​னேசி​யா​வில் இருந்து குறைந்த தரத்​தில், மலி​வான விலை​யில் அலுமினியப் பொருட்​கள் இறக்​குமதி செய்​யப்​படு​கின்​றன. நமது உள்​நாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறு​வனங்​களை பாது​காக்க, அலுமினிய இறக்​கும​தியை நிறுத்த வேண்​டும்.

இதுத​விர, மூலப் பொருட்​களின் விலை​யும் இந்​தி​யா​வில் மிக அதி​க​மாக இருக்​கிறது. இதை​யும் குறைக்க வேண்​டும். இறக்​குமதி செய்​யப்​படும் அலுமினி​யம் உட்பட இந்​தி​யப் பொருள்​களுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்​துள்​ளது. தனி​நபர் அலுமினி​யம் நுகர்வு சீனா​வில் 25 முதல் 30 கிலோ​வும், அமெரிக்​கா​வில் 22 முதல் 25 கிலோ​வும் உள்​ளது.

ஆனால், இந்​தி​யா​வில் நுகர்வு குறை​வாக உள்​ளது. எனவே, உள்​நாட்டு அலுமினியப் பயன்​பாட்டை அதி​கரிக்க அரசு ஆதர​வளிக்க வேண்​டும். இதற்கு உள்​நாட்டு நிறு​வனங்​களை ஆதரிக்க வேண்​டும். இதனால் வேலை​வாய்ப்பு அதி​கரிக்​கும். நாட்​டின் மொத்த உற்​பத்தி அதி​கரிக்​கும். டெல்​லி​யில் செப். 10 முதல் 13-ம் தேதி வரை அலுமினிய உருக்கு கண்​காட்சி நடை​பெற உள்​ளது. அங்கு 200-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்பட உள்​ளன. இவற்றை பல்​லா​யிரக்​கணக்​கானோர் பார்​வை​யிட உள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x