Published : 19 Aug 2025 06:47 AM
Last Updated : 19 Aug 2025 06:47 AM

கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல்

காரக்பூர்: காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது:

உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது. இந்​நிலை​யில், எதிர்​காலத்தை நிர்​ண​யிப்​பது நமது தயாரிப்​புத் திறன்​தான். இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன. துப்​பாக்​கி​கள் அல்ல, ‘அல்​காரிதங்​கள்’ தான் ஆயுதங்​கள். நிலத்​தில் அல்ல, ‘டேட்டா சென்​டர்​களில்’ தான் பேரரசுகள் உரு​வாகின்​றன. வீரர்​கள் அல்ல, ‘பாட்​நெட்​கள்’ தான் படைகள்.

நம் நாடு தொழில்​நுட்​பத்தை சார்ந்​துள்ள நிலை​யில், 90% குறைக்​கடத்​தி​களை இறக்​குமதி செய்​கிறோம். இதில் ஏதேனும் தடங்​கல் ஏற்​பட்​டால் நாட்​டின் டிஜிட்​டல் பொருளா​தா​ரம் முடங்​கிப் போகும் அபா​யம் உள்​ளது. நமக்​குத் தேவை​யான கச்சா எண்​ணெ​யில் 85 சதவீதத்தை இறக்​குமதி செய்​கிறோம். இதனால் உலகில் எங்கோ நடக்​கும் புவி அரசி​யல் நிகழ்​வு​கூட நமது வளர்ச்​சியை தடுக்​கக்​கூடும்.

எனவே, புதிய வகை போர்​களுக்​குத் தயா​ராகும் நமது திறன்​தான் நாட்​டின் எதிர்​காலத்தை நிர்​ண​யிக்​கும். இதற்கு அனைத்து துறை​களி​லும் நாம் தன்​னிறைவு பெற வேண்​டியது அவசி​யம்​.இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x