Published : 17 Aug 2025 09:18 AM
Last Updated : 17 Aug 2025 09:18 AM

யுரேனியம் எடுக்க, இறக்குமதிக்கு தனியாரை அனுமதிக்க அரசு திட்டம்!

புதுடெல்லி: அணுசக்திப் பொருட்களை தவறான பயன்படுத்துவதற்கான வாய்ப்பு, கதிர்வீச்சு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக யுரேனியம் தாதுக்களை வெட்டியெடுத்தல், இறக்குமதி செய்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றில் மத்திய அரசு தனி யாரை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் 2047-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணுமின் உற்பத்தி திறனை 12 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அணுசக்தி துறையில் அரசின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இத்துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு திட்டமிட்டுள்ளது.

என்றாலும் உலகளா​விய நடை​முறை​களைப் பின்​பற்றி பயன்​படுத்​தப்​பட்ட யுரேனி​யம் எரிபொருளை மறுசுழற்சி செய்​தல் மற்​றும் புளூட்​டோனி​யம் கழி​வு​களை நிர்​வகித்​தல் ஆகிய​வற்​றில் அரசு தனது பிடியை தக்க வைத்​துக் கொள்​ளும்.

இந்​தி​யா​வில் 76,000 டன் யுரேனி​யம் இருப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது, இது 30 ஆண்​டு​களுக்கு தலா 10 ஆயிரம் மெகா​வாட் மின்​னுற்​பத்​திக்கு போது​மானது. என்​றாலும் அரசின் இலக்கை எட்​டு​வதற்​கான தேவை​யில் சுமார் 25% மட்​டுமே உள்​நாட்டு வளங்​கள் பூர்த்தி செய்ய முடி​யும். எனவே 75% இறக்​குமதி செய்​யப்பட வேண்​டும். மேலும் இந்​தியா அதன் பதப்​படுத்​துதல் திறனை அதி​கரிப்​பதும் அவசி​ய​மாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x