Published : 16 Aug 2025 06:48 AM
Last Updated : 16 Aug 2025 06:48 AM

ஓஎன்ஜிசியின் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது: செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் தகவல்

காரைக்கால்: காரைக்​கால் மாவட்​டம் நிர​வி​யில் உள்ள ஓஎன்​ஜிசி (எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு கழகம்) காவிரி அசட் நிர்​வாக அலு​வலக வளாகத்​தில் சுதந்திர தின விழா நேற்று நடை​பெற்றது. இந்த விழா​வில், ஓஎன்​ஜிசி செயல் இயக்​குநரும், காவிரி அசட் மேலா​ள​ரு​மான உதய்பாஸ்​வான் தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்​து, காவலர்​கள், பள்ளி மாணவர்​களின் அணிவகுப்பு மரி​யாதையை ஏற்றுக் கொண்​டார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: ஓஎன்​ஜிசி நிறு​வனத்​தின் எண்​ணெய் உற்​பத்தி நாளொன்​றுக்கு 700 டன் என்ற நிலை​யில் இருந்து 600 டன் என்ற அளவில் குறைந்​துள்​ளது. பாதுகாக்​கப்​பட்ட வேளாண் மண்டல சட்​டத்​தால் பராமரிப்​புப் பணி​களைக்​கூடமேற்​கொள்ள முடிய​வில்​லை. டெல்டா அல்​லாத மாவட்​ட​மான ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் புதி​தாக துரப்பண பணி​களை மேற்​கொள்ள பொது​மக்​கள் கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த இன்​னும் அனு​மதி கிடைக்​க​வில்​லை.

அதனால் துரப்பண பணி​களை மேற்​கொள்ள முடி​யாத நிலை உள்​ளது. கருத்​துக் கேட்​புக் கூட்​டம் நடத்த தமிழக அரசு அனு​மதி வழங்க வேண்​டும்.
நிலக்​கரிக்கு மாற்​றாக இயற்கை எரி​வாயு மூலம் மின்​சார உற்​பத்தி செய்ய முடி​யும். இது சுற்​றுச்​சூழலை பாதிக்​காது. பொருளா​தார முன்​னேற்​றம் ஏற்​படும். பசுமை எரிசக்தி என்று சொல்​லக் கூடிய சூரிய சக்​தி, காற்​றாலை மூலம் மின் உற்​பத்தி செய்​யும் நிறு​வனங்​களில் ஓஎன்​ஜிசி முதலீடு செய்​துள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார். தொடர்ந்​து, ஓஎன்​ஜிசி பொதுப்​பள்ளி மாணவ, மாணவி​களின் கலைநிகழ்ச்​சிகள் நடைபெற்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x