Published : 13 Aug 2025 07:29 AM
Last Updated : 13 Aug 2025 07:29 AM

வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை

புதுடெல்லி: இந்​தியா மற்​றும் வங்​கதேசத்​துக்கு இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டுள்ள நிலை​யில் அங்​கிருந்து தரைவழி​யாக சணல் பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மத்​திய அரசு தடை வி​தித்​துள்​ளது.

வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறியிருப்பதாவது: வங்​கதேசத்​தில் இருந்து கயிறு, சணல் பொருட்​களை தரை மார்க்​க​மாக இறக்​குமதி செய்​வதற்கு உடனடி​யாக தடை விதிக்​கப்​படு​கிறது.

இதில், சணல் சாக்​கு​கள், சணல் கயிறு, பைப​ரால் நெய்த துணி​கள் உள்​ளிட்​ட​வை​யும் இந்த தடைப் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், மகாராஷ்டி​ரா​வில் உள்ள நவ ஷேவா துறை​முகம் வழி​யாக இந்த பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு மட்​டும் அனு​மதி வழங்​கப்​படும்.

இவ்​வாறு அந்த அறிவிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த மே மாதத்​தில் வங்​கதேசத்​திலிருந்து ஆயத்த ஆடைகள் மற்​றும் பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​கள் உள்​ளிட்ட சில பொருட்​களை இறக்​குமதி செய்​வதற்கு துறை​முக கட்​டுப்​பாடு​களை இந்​தியா விதித்​தது.

வங்​கதேச இடைக்​கால அரசின் தலை​வர் முகமது யூனுஸ், சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​களை, குறிப்​பாக இந்​துக்​கள் மீதான தாக்​குதல்​களைக் கட்​டுப்​படுத்​தத் தவறியதைத் தொடர்ந்து இந்​தி​யா-வங்​கதேச உறவு மோசமடைந்​துள்​ளது.

ஜவுளித் துறை​யில் வங்​கதேசம் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய போட்​டி​யாள​ராக உள்​ளது. 2023-24 -ம் ஆண்​டில் இந்​தி​யா-வங்​கதேச வர்த்​தகம் 12.9 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக இருந்​தது. 2024-25 -ம் ஆண்​டில், இந்​தி​யா​வின் ஏற்​றுமதி 11.46 பில்​லியன் டாலர்​களாக​வும், இறக்​குமதி 2 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக​வும்​ இருந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x