Published : 12 Aug 2025 05:34 AM
Last Updated : 12 Aug 2025 05:34 AM

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக்

சென்னை: தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பாட்​டில்​கள் திரும்​பப் பெறும் திட்​டம் நவம்​பர் மாதத்​துக்​குள் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள வனப்​பகு​தி​கள் மற்​றும் சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​வது தொடர்​பான வழக்​கில், இயற்கை சூழலுக்​கும், வனவிலங்​கு​களுக்​கும் ஏற்​படும் பாதிப்பை போக்க, காலி மது​பான பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதைதொடர்ந்து டாஸ்​மாக் நிர்​வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீல​கிரி​யில் உள்ள கடைகளில் காலி மது​பாட்​டில்​களை திரும்ப பெறும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யது. மேலும் இந்த திட்​டத்தை தமிழ்​நாடு முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. இந்த திட்​டத்​தின்​படி விற்​பனை செய்​யப்​படும் மது​பாட்​டில்​கள் மீது ரூ.10 கூடு​தலாக விற்க வேண்​டும். இதையடுத்து வாடிக்கையாளர்​கள் காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்​களிடம் திருப்பி கொடுக்க வேண்​டும்.

தற்​போது பெரம்​பலூர், அரியலூர், நீல​கிரி, கோவை, நாகை, திரு​வாரூர், தர்​மபுரி, தேனி மற்​றும் குமரி உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது. இந்​நிலை​யில் வரும் நவம்​பர் மாதத்​துக்​குள் தமிழகம் முழு​வதும் இத்​திட்​டம் விரி​வாக்​கம் செய்யப்படும் என டாஸ்​மாக் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இது குறித்து அவர்​கள் மேலும் கூறிய​தாவது: இந்த திட்​டத்​தில் தற்​போது 95 சதவீதம் வரை காலி பாட்​டில்​கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்ப பெறப்​படு​கிறது. இது​வரை வாடிக்​கை​யாளர்​களிடம் ரூ.450 கோடி வசூலிக்​கப்​பட்டு அதில் ரூ.350 கோடி மீண்​டும் அவர்​களிடம் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. மீத​முள்ள தொகை தனி கணக்​கில் சேமித்து வைக்கப்படுகிறது. இதை மாநிலம் முழு​வதும் விரி​வாக்​கம் செய்​ய நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

அந்​தவகை​யில் சென்​னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 17 மாவட்​டங்​கள் விரி​வாக்​கம் செய்​வதற்​கான டெண்​டர்​கள் விடப்​பட்​டுள்​ளன. இந்த ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் இந்த வாரத்​துக்​குள் இறுதி செய்​யப்​படும். நவம்​பர் மாதத்​துக்​குள் அமல்​படுத்த நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். இவ்​வாறு கூறி​னர்.

இருப்​பினும் இந்த திட்​டத்தை செயல்​படுத்த நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தாக பணி​யாளர்​கள் கூறுகின்​றனர். ஒரு சில கடைகளில் இடம் இல்லை என்​றும் அதற்​கான வசதி​களை ஏற்ப​டுத்த வேண்​டும் என்​றும் காலி மது பாட்​டில்​களை பெறும் பணியாள​ருக்கு பாது​காப்பு உபகரணங்​கள் இல்​லாததல், தோல் பா​திப்​பு ஏற்​படு​வ​தாக​வும்​ பணி​யாளர்​கள்​ தெரிவிக்​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x