Published : 04 Aug 2025 07:11 AM
Last Updated : 04 Aug 2025 07:11 AM

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு இந்தியாவில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்​றில், அமெரிக்​கா​வின் வரி​விலக்கு சட்ட விதிப்​படி, பாதிப்​பொருட்​களுக்கு அமெரிக்கா வரி​விலக்கு அளிக்​கிறது.

மருந்து பொருட்​கள், எரிசக்தி பொருட்​கள், முக்​கிய​மான கனிமங்​கள், எலக்ட்​ரானிக் பொருட்​கள் ஆகிய​வற்​றுக்கு 25 சதவீத வரி​விலக்கு பொருந்​தாது. எனவே, 4 ஆயிரத்து 800 கோடி டாலர், அதாவது மொத்த ஏற்​றும​தி​யில், ஏறத்​தாழ பாதி மதிப்​புள்ள இந்​திய ஏற்​றும​திக்கு மட்​டுமே பாதிப்பு இருக்​கும் என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இந்​நிலை​யில், இந்த 25 சதவீத புதிய வரி​வி​திப்​பு இந்​தி​யா​வில் மிகக்​குறைந்த அளவி​லான தாக்​கத்தையே ஏற்​படுத்​தும் என பொருளா​தார நிபுணர்​கள் கணித்​துள்​ளனர். அதாவது மொத்த உள்​நாட்டு உற்​பத்தி இழப்பு 0.2 சதவீதத்​தைத் தாண்ட வாய்ப்​பில்லை என்று இந்​தி​யா​வைச் சேர்ந்த பொருளா​தார நிபுணர் ஒரு​வர் புளூம்​பெர்க் பொருளா​தார ஆய்வு அமைப்​பிடம் தெரி​வித்​துள்​ள​தாக மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

விலை​வாசி உயர்​வுக்கு ஏற்ற விவ​சா​யம், பால் பொருள் சந்​தைகளைத் திறக்க வேண்​டும் உள்​ளிட்ட அமெரிக்க அரசின் அழுத்​தத்​துக்கு இந்​திய அரசு அடிபணி​யாது என்​றும், மாட்​டிறைச்சி அல்​லது ‘அசைவப் பால்' இறக்​கும​தியை அனு​ம​திக்​காது என்றும் அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. ‘தேசிய நலனைப் பாது​காக்க' இந்​திய அரசு திறன்பட செயல்​படும் என்​றும் அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. கடந்த நிதி​யாண்​டில் அமெரிக்கா​வுக்​கான இந்​தி​யா​வின் ஏற்​றுமதி 11.6 சதவீதம் அதி​கரித்து 86.51 பில்​லியன் டால​ராக உயர்ந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x