Published : 03 Aug 2025 01:06 PM
Last Updated : 03 Aug 2025 01:06 PM
சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு ரூ.1 திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின்படி, இந்த மாதத்தில் பிஎஸ்என்எல்-ன் 4-ஜி சேவைகளை ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்துப் பார்க்க, வரையறுக்கப்பட்ட காலத்துக்கு ரூ.1 விலையில் வழங்குகிறது. இது, நாட்டடின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும், மேலும், இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4-ஜி தொழில் நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க மக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.
இந்த திட்டத்தில், வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் / எஸ்டிடி), தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு பிஎஸ்என்எல் சிம் முற்றிலும் இலவசம் ஆகியவை அடங்கும். பொதுமக்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா நடைபெறும் இடங்களுக்குச் சென்று இந்த சுதந்திர திட்டத்தை பெறலாம் என்று பிஎஸ்என்எல் தமிழக வட்டம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT