Published : 01 Aug 2025 06:09 AM
Last Updated : 01 Aug 2025 06:09 AM

சென்னையில் ரூ.35 லட்சத்தில் 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு பணி: ஒப்பந்தப்புள்ளி கோரியது ஆவின் நிறுவனம்

சென்னை: சென்​னை​யில், ரூ.35 லட்​சம் மதிப்​பில் நுங்​கம்​பாக்​கம், அரும்​பாக்​கம் உள்பட 7 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில், சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் ஒப்​பந்​தப் புள்​ளியை கோரி​யுள்​ளது.

தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருள்​கள் விற்​பனை செய்​யும் பணி​யில் ஆவின் நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. ஆவின் நிறு​வனம் சார்​பில், நாள்​தோறும் சுமார் 30 லட்​சம் லிட்​டர் பால் கொள்​முதல் செய்​து, அதை பதப்​படுத்தி பலவகை​களில் பிரித்து விநி​யோகிக்​கப்​படு​கிறது. இது தவிர, 220-க்​கும் மேற்​பட்ட பால் பொருள்​கள் தயாரித்து விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

சென்னை மற்​றும் புறநகரில் தினசரி சுமார் 15 லட்​சம் லிட்​டர் பால் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது. ஒவ்​வொரு மாத​மும் ரூ.30 கோடி மதிப்​பிலான பால் உபபொருட்​கள் விற்​கப்​படு​கின்​றன. பால் மற்​றும் பால் உபபொருட்​களை 35 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​கள், 200 ஆவின் பால​கங்​கள் மற்​றும் 860 சில்​லரை விற்​பனை​யாளர்​கள் மூல​மாக விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. பால் பொருட்​கள் விற்​பனை​யில் ஆவின் ஜங்​ஷன் பால​கங்​கள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன.

இதற்​கிடை​யில், பொது​மக்​கள் மற்​றும் குழந்​தைகளை கவரும் வகை​யில், சென்​னை​யில் உள்ள அனைத்து ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில் சீரமைப்பு பணி​களை மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் முடிவு செய்​தது. அதன்​படி, முதல்​கட்​ட​மாக விரு​கம்​பாக்​கம், ராஜ்பவன், அசோக்​நகர், அண்​ணாநகர், எழில​கம் ஆகிய 5 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில் சீரமைப்பு பணி​கள் ரூ.20 லட்​சம் மதிப்​பில் கடந்த மாதம் தொடங்​கியது. தற்​போது, முழு​வீச்​சில் பணி​கள் நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில், மேலும் 7 ஆவின் ஜங்​ஷன் பாலங்​களில் சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் ஒப்​பந்​தப்​புள்​ளியை கோரி​யுள்​ளது. இதுகுறித்​து, ஆவின் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பொது​மக்​களுக்கு பால் மற்​றும் பால் உபபொருட்​கள் விநி​யோகம் செய்​வ​தில் ஆவின் பால​கங்​கள் முக்​கிய பங்​காற்றி வரு​கின்​றன. இவற்​றில் ஆவின் ஜங்​ஷன் பாலங்​களை சீரமைக்க திட்​ட​மிட்​டு, முதல் கட்​ட​மாக, 5 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​கள் சீரமைப்பு பணி மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இவை​கள் ஒரு மாதத்​தில் முடிந்து விடும்.

இது​போல, நுங்​கம்​பாக்​கம், அரும்​பாக்​கம், பார்க் ரோடு, வசந்​தம் காலனி, அம்​பத்​தூர், டிஏவி மற்​றும் எஸ்​ஐஇடி ஆகிய 7 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​கள் சீரமைப்பு செய்ய முடிவு செய்​யப்​பட்​டு, ஒப்​பந்​தப் புள்ளி கோரப்​பட்​டுள்​ளது. 15 நாட்​களில் நிறு​வனங்​களை தேர்வு செய்​து, ஒப்​பந்​தம் வழங்​கப்​படும். அதன் பிறகு, 2 மாதங்​களில், சீரமைப்பு பணி முடிந்து விடும். இந்த பால​கங்​களை வாடிக்​கை​யாளர்​கள் மற்​றும் குழந்​தைகளை கவரும்​ வித​மாக மாற்​று​வது எங்​கள்​ நோக்​க​மாகும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x