Published : 28 Jul 2025 05:44 AM
Last Updated : 28 Jul 2025 05:44 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்​டாளர் மாநாடு நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்​கு​விப்பு மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா கூறி​னார்.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்த பின்​னர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலை திறப்பு விழா பிரம்​மாண்​ட​மாக நடை​பெற உள்​ளது.

இந்த கார் தொழிற்​சாலையை ஆகஸ்ட் 4-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கிவைக்​கிறார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்​டாளர் மாநாடு நடத்​த​வும் திட்​ட​முள்​ளது. அதில் பல்​வேறு புதிய தொழில்​கள் வர உள்​ளன.

பிரதமர் மோடி​யின் புதிய திட்​டங்​களால் தமிழ்​நாட்​டுக்கு பலன்​கள் உள்​ளன. இருப்​பினும் தூத்​துக்​குடி மாவட்​டத்​துக்​கான வெள்ள நிவாரணத் தொகை​யை​யும், கல்​வித் தொகை​யை​யும் பிரதமர் கொடுத்​திருந்​தால் மகிழ்ச்​சி​யாக இருந்​திருக்​கும்.

முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பரந்து விரிந்த மனது. பிரதமர் மோடி அறி​வித்​ததை​விட பன்​மடங்கு பெரிய திட்ட அறி​விப்​பு​கள் தூத்​துக்​குடிக்கு காத்​திருக்​கின்​றன. வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி வரலாற்று வெற்​றி​பெறும். இவ்​வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x