Last Updated : 28 Jul, 2025 06:31 AM

 

Published : 28 Jul 2025 06:31 AM
Last Updated : 28 Jul 2025 06:31 AM

அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அதிகபட்ச மின் தேவை 20,830 மெகாவாட்டாக பதிவானது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின் தேவை அதிகரிக்கும் என கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின் தேவை அதிகரிக்கவில்லை. மேலும் 2026 27-ம் ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை 23 ஆயிரம் வாட்டாக அதிகரிக்கும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரி​யம் தனக்கு சொந்​த​மான அனல், எரி​வாயு மின் நிலை​யங்​கள், சூரியசக்தி மற்​றும் காற்​றாலைகள் மூல​மாக மின் உற்​பத்தி செய்து தேவையை சமாளிக்​கும். இதை தவிர மத்​திய அரசின் மின் உற்​பத்தி நிலை​யங்​களில் இருந்து கிடைக்​கும் தமிழகத்​துக்​கான பங்​கி​ல் இருந்​தும் தேவை பூர்த்தி செய்​யப்​படு​கிறது. இவை தவிர தேவை அதி​கரிக்​கும் போது மாநிலங்​களுக்கு இடையே மின்​சார பரி​மாற்ற ஒப்​பந்​தம் மற்​றும் வெளிச்​சந்​தைகளில் இருந்து நீண்ட, நடுத்​தர, குறுகிய கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள் வாயி​லாக மின் தேவை பூர்த்தி செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் அதி​கரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய அடுத்த ஆண்டு பிப்​ர​வரி முதல் 5 ஆண்​டு​களுக்கு நாடு முழு​வதும் மற்​றும் மாநிலத்​துக்​குள் உள்ள தனி​யார் உற்​பத்​தி​யாளர்​களிட​ம் இருந்து 1,500 மெகா​வாட் மின்​சா​ரத்தை வாங்​க​ உள்​ள​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

நடுத்தர கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​களின் கீழ் பிற மாநிலங்​களில் உள்ள மின் உற்​பத்தி நிலை​யங்​களில் இருந்து 800 மெகா​வாட் மின்​சார கொள்​முதலுக்கு டெண்​டர் வெளி​யிட மின் பகிர்​மானக் கழகத்​துக்கு தமிழ்​நாடு மின்​சார ஒழுங்​கு​முறை ஆணை​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது. டெண்​டர் விரை​வில் மத்​திய எரிசக்தி அமைச்​சகத்​தின் டீப் போர்ட்​டலில் வெளி​யிடப்​படும். குறைந்த விலை வழங்​கும் நிறு​வனம் தேர்வு செய்​யப்​படும். மீத​முள்ள 700 மெகா​வாட்​டுக்​கு, மாநிலத்​துக்​குள் உள்ள உற்​பத்​தி​யாளர்​களு​டன் ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் 2,830 மெகா​வாட்​டுக்​கான நீண்​ட​கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள் 2028-ம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நேரத்​தில் நடுத்தர கால ஒப்​பந்​தங்​கள் அவசி​ய​மாகின்​றன. 2028 வரை நீண்ட கால ஒப்​பந்​தங்​களை மேற்​கொள்ள முடி​யாது என்​ப​தால், செல​வு​களைக் கட்​டுக்​குள் வைத்​திருக்க நடுத்தர கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​களை மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

குறுகிய கால மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​களில் ஒரு யூனிட்​டுக்கு ரூ.8 முதல் 10 வரை செலவு இருக்​கும். ஆனால் நடுத்தர கால ஒப்​பந்​தங்​கள் மூலம் குறைந்த விலை மின்​சா​ரத்தை பெற முடி​யும். தற்​போது மின் பகிர்​மானக் ​கழகத்​தில் உள்ள 4 நடுத்தர கால ஒப்​பந்​தங்​களில், 2 ஏற்​கெனவே காலா​வ​தி​யாகி​விட்​டன. அதே நேரத்​தில் ஆலைகளுக்கு நிலக்​கரி கிடைப்​ப​தில் உள்ள பிரச்​சினை​கள் காரண​மாக மற்ற 2 ஒப்​பந்​தங்​களில் மின் விநி​யோகம் வழங்​கப்​பட​வில்​லை.

2026-27-ம் ஆண்​டில் மின்​சார பற்​றாக்​குறை 3,845 மெகா​வாட்​டாக​வும், 2029-30-ம் ஆண்​டில் 6,822 மெகா​வாட்​டாக​வும் இருக்​கும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட மத்​திய மின்​சார ஆணை​யம் பரிந்​துரைத்​தது.

15,043 மெகா​வாட் திறன் கொண்ட சொந்த அனல் மின் உற்​பத்​தி, மத்​திய மின் உற்​பத்தி நிலை​யங்​கள் மற்​றும் மின் கொள்​முதல் ஒப்​பந்​தங்​கள் மூலம் மின்​சா​ரம் கிடைத்​தா​லும், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி ஆதா​ரங்​களின் கணிக்க முடி​யாத தன்மை காரண​மாக மாலை நேர தேவையைப் பூர்த்தி செய்ய கூடு​தல் மின்​சா​ரம் தேவைப்​படுகிறது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x