Published : 21 Jul 2025 04:43 AM
Last Updated : 21 Jul 2025 04:43 AM

உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுறவு துறை: தமிழக அரசு பெருமிதம்

சென்னை: ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கான உணவு பாது​காப்பை கூட்​டுறவுத் துறை உறுதி செய்​வ​தாக அரசு பெரு​மிதம் தெரிவித்துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்தலுக்கு முன் தேர்​தல் அறிக்​கை​யில் கூறியபடி, கூட்​டுறவு நிறு​வனங்​களில் ஒரு குடும்​பத்​தில் 5 பவுனுக்கு உட்​பட்டு நகைக்கடன் பெற்ற 11.70 லட்​சம் பயனாளி​களுக்கு ரூ.4,904 கோடி அளவுக்​குத் தள்​ளு​படிச் சான்​றிதழுடன், அவர்​கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்​கப்​பட்​டன.

கூட்​டுறவு நிறு​வனங்​கள் மூலம் வழங்​கப்​பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்​களில் ரூ.2,118.80 கோடி தள்​ளு​படி செய்​யப்​பட்டு 1 லட்​சத்து 1,963 மகளிர் சுய உதவிக் குழுக்​களைச் சார்ந்த 10 லட்​சத்து 56,816 பெண்​கள் பயன்​பெற்​றனர். பயிர்க் கடன்​களை உரிய காலத்​தில் திருப்​பிச் செலுத்​தும் விவ​சா​யிகளுக்கு வட்​டி​யில்​லாப் பயிர்​கடன்​களாக 66 லட்​சத்து 24,955 விவ​சா​யிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

கால்​நடை வளர்ப்பு மற்​றும் அதன் தொடர்​புடைய பணி​களுக்​காக ரூ.6,372.02 கோடி கடனை திமுக அரசு வழங்​கி​யுள்​ளது. சமூக நீதியை மேம்​படுத்​தும் வண்​ணம் 16,578 பணிபுரி​யும் பெண்​களுக்கு ரூ.470.01 கோடி​யும், 49,000 மகளிர் தொழில் முனை​வோருக்கு ரூ.283.27 கோடி​யும் 4,494 நாட்​டுப்​புறக் கலைஞர்​களுக்கு ரூ.18.80 கோடி​யும் கடன்​களாக வழங்​கப்​பட்​டுள்​ளன.

அண்​ணல் அம்​பேத்​கர் வணிக முன்​னோடி திட்​டத்​தில் மாவட்ட மத்​திய கூட்​டுறவு வங்​கி​களின் மூலம் ரூ.52.34 கோடி கடன் உதவியுடன் 86 துப்​புர​வுப் பணி​யாளர்​களுக்கு கழி​வுநீரகற்று வாக​னங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இது​வரை 9,132 காலிப்​பணியிடங்கள் நிரப்​பப்​பட்​டும், 3,353 காலிப்​பணி​யிடங்​கள் நிரப்​புவதற்​கும் தொடர்​புடைய மாவட்ட ஆள்​சேர்ப்பு நிலை​யங்​கள் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

வேளாண்மை உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களின் வர்த்​தகம் ரூ.10283.21 கோடி​யாக உள்​ளது. தமிழகத்​தில் அதிக எண்ணிக்​கையி​லான கூட்​டுறவுச் சங்​கங்​களின் கிடங்​கு​களைக் கிடங்கு மேம்​பாட்டு ஒழுங்​கு​முறை ஆணை​யத்​தில் பதிவு செய்ததற்​காக தமிழக அரசுக்கு விருது கிடைத்​துள்​ளது.

தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினின் எல்​லோருக்​கும் எல்​லாம் என்​னும் கொள்​கை​படி கூட்​டுறவு அமைப்​பு​கள் தமிழகத்​தில் சிறப்பாகச் செயல்​படு​கின்​றன. ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் தேவை​யான உணவு பாது​காப்பை உறுதி செய்​கின்​றன. மத்​திய அரசின் பா​ராட்​டு​களை​யும் விருதுகளை​யும் பெற்று கூட்​டுறவுத் துறை மூலம் தமிழகம் இந்​தி​யா​வில் உயர்ந்து சிறந்​து விளங்குகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x