Published : 14 Jul 2025 06:20 AM
Last Updated : 14 Jul 2025 06:20 AM

2 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டதாக புகார்: 8.5 லட்சம் ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை திரும்பப் பெறும் வால்மார்ட்

நியூயார்க்: இரண்டு வாடிக்​கை​யாளர்​களுக்கு பார்​வை​யிழப்பு ஏற்​பட்​ட​தாக புகார் எழுந்​த​தால், 8.5 லட்​சம் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டில்​களை திரும்​பப் பெறுவதாக வால்​மார்ட் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​காவைச் சேர்ந்த சில்​லறை வர்த்தக நிறு​வன​மான வால்​மார்ட், ‘ஓசார்க் டிரயல் 64 ஆஸ் ஸ்டெ​யின்​லெஸ் ஸ்டீல் இன்​சுலேட்​டடு வாட்​டர் பாட்​டிலை' கடந்த 2017-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வில் விற்​பனை செய்து வரு​கிறது.

இந்​நிலை​யில், அமெரிக்க நுகர்​பொருள் தயாரிப்பு பாது​காப்பு ஆணை​யம் (சிபிஎஸ்​சி) வெளி​யிட்ட அறிவிக்​கை​யில், “வால்​மார்ட்​டின் ஸ்டீல் தண்​ணீர் பாட்​டிலில் கார்​பன் ஏற்​றப்​பட்ட பானங்​கள் அல்​லது பழச்​சாறு அல்​லது பால் போன்ற கெட்​டுப்​போகக் கூடிய பானங்​களை அடைத்து வைத்​து​விட்டு திறந்​த​போது அதன் மூடி அதிக அழுத்​தத்​துடன் வெளிப்​படு​வ​தாக புகார் எழுந்​துள்​ளது. குறிப்​பாக, அவ்​வாறு திறந்​த​போது அதன் மூடி முகத்​தில் தாக்​கிய​தில் காயமடைந்​த​தாக 3 வாடிக்​கை​யாளர்​கள் வால்​மார்ட் நிறு​வனத்​திடம் புகார் தெரி​வித்​துள்​ளனர்.

இதில் 2 பேரின் கண்​ணில் மூடி பட்​ட​தால் பார்வை நிரந்​தர​மாக பறி​போய் உள்​ளது. எனவே, இந்த பாட்​டில்​களை பயன்​படுத்​து​வதை உடனடி​யாக நிறுத்த வேண்​டும். இந்த பாட்​டிலை வால்​மார்ட் நிறு​வனத்​திடம் ஒப்​படைத்து பணத்​தைப் பெற்​றுக் கொள்​ளலாம்’’ என கூறப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து வால்​மார்ட் நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வாடிக்​கை​யாளர்​களின் சுகா​தா​ரம் மற்​றும் பாது​காப்​புக்கு நாங்​கள் எப்​போதும் அதிக முன்​னுரிமை வழங்​கு​கிறோம். பிரச்​சினைக்​குரிய 8.5 லட்​சம் தண்​ணீர் பாட்​டில்​களை எங்​கள் விற்​பனை மையங்​களில் கொடுத்து அதற்​கான பணத்தை பெற்​றுக் கொள்​ளலாம். இந்த விவ​காரத்​தில் சிபிஎஸ்​சி-க்கு முழு ஒத்​துழைப்பு அளிப்​போம். இந்த பாட்​டில்​களின் விற்​பனையை உடனடி​யாக நிறுத்​த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது’’ என கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x