Published : 13 Jul 2025 12:20 AM
Last Updated : 13 Jul 2025 12:20 AM

நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு

சென்னை: நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்ச்​சி​யில், லடாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே நகரில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள நபார்டு துணை அலு​வல​கத்தை மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு திறந்து வைத்​தார். மேலும், நபார்​டுக்​கான வாட்​ஸ்​-அப் சேனல், படித்த கிராமப்​புற பெண்​களுக்​கான வரு​வாய் ஈட்​டும் திட்​டம், கிராமப்​புறங்​களில் தொழில்​நுட்​பங்​களை விரி​வாக்​கம் செய்​யும் திட்​டம் ஆகிய​வற்​றையும் தொடங்கி வைத்​தார்.

தொடர்ந்​,து நபார்டு வங்​கி​யின் சாதனை விளக்​க புத்​தகங்​களை தமிழக அரசின் தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வெளி​யிட்​டார். அவர் பேசும்​போது, ‘‘நாட்​டின் வளார்ச்​சி, கிராமப்​புற வளர்ச்​சி​யில் நபார்டு வங்​கி​யின் பங்கு மிகப் பெரியது. தமிழகத்​தைப் பொறுத்​தவரை 50 சதவீதம் நகர்​புறம், 50 சதவீதம் கிராமப்​புற பகு​தி​களாக உள்​ளன. 2030-ம் ஆண்​டில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம், 2047-ல் 4.5 டிரில்​லியன் டாலர் பொருளா​தா​ரம் என்ற நிலையை அடைய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இலக்கை அடைய தொழில் வளர்ச்​சி​யுடன், விவ​சாய​மும் வளர்ச்சி அடைய வேண்​டும். நகர்ப்​புற கட்​டமைப்​பு​கள் கிராமப்​புறங்​களி​லும் இருக்க வேண்​டும்’’ என்​றார்.

மத்​திய நிதித் துறை செயலர் நாக​ராஜு பேசி​ய​தாவது: சுயஉதவிக் குழுக்​கள் மூலம் பெண்​களுக்கு அதி​காரம் அளித்​த​தில் நபார்​டின் பணி முதன்​மை​யானது. உலகில் வேறு எந்த அமைப்​பும் இதை செய்​த​தில்​லை. ஆப்​பிரிக்க, தென் அமெரிக்க, கிழக்கு ஆசிய நாடு​களில் நபார்​டின் சிறப்​பான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. நபார்டு சிறப்​பாக பணி​யாற்​றி​னாலும் சில சவால்​கள் உள்​ளன, குறிப்​பாக, நிதிக்​காக அரசை எதிர்​பார்க்க வேண்​டிய சூழல் உள்​ளது. 44 ஆண்​டு​களாக நபார்டு செயல்​பட்​டாலும், பழங்​குடி​யின மக்​களுக்கு முழு​மை​யாக சென்​றடைய​வில்​லை.

தென் மாநிலங்​களில் நபார்டு சேவை​கள் சிறப்​பாக உள்​ளன. ஆனால், வடகிழக்கு மாநிலங்​கள், ஜார்க்​கண்ட், சத்​தீஸ்​கர், மத்​திய பிரதேசத்​தில் நபார்டு சரி​யாக சென்​றடைய​வில்​லை. வடக்​கிழக்கு மாநில மக்​களுக்கு நபார்டு திட்​டங்​களை கொண்​டு செல்​ல வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x