Published : 01 Jul 2025 06:14 AM
Last Updated : 01 Jul 2025 06:14 AM

அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக அமெரிக்கா உள்​ளது. எனவே இந்​தியா - அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தத்தை ஆவலுடன் எதிர்​பார்க்​கிறேன். வரும் 2047-க்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை அடைய நமது இலக்​கு​களை​யும், லட்​சி​யத்​தை​யும் கருத்​தில் கொண்டு உலகின் வலு​வான பொருளா​தா​ரங்​களு​டன் இது​போன்ற ஒப்​பந்​தங்​களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்​டும்.

அந்த வகை​யில், அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கருத்​து​தான் என்​னுடையதும். அமெரிக்​கா-இந்​தி​யா​வுக்கு இடை​யில் சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை உரு​வாக்க வேண்​டும். இதற்​காக இந்​தியா ஆழமான ஈடு​பாட்டை கொண்​டிருந்​தா​லும் முக்​கிய​மான துறை​களில் சமரசம் செய்​யாது. குறிப்​பாக, விவ​சா​யிகள், கால்​நடை வளர்ப்​போர் உட்பட உள்​நாட்டு நலன்​களை பாது​காப்​ப​தற்கு முன்​னுரிமை கொடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா அதி​கள​வில் வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கு பதிலடி​யாக இந்​திய பொருட்​களுக்கு 26 சதவீதம் கூடு​தல் வரி விதித்​தார். இருப்​பினும், நடவடிக்​கைகளை ஜூலை 9-ம் தேதி வரை நிறுத்தி வைப்​ப​தாக ட்ரம்ப் அறி​வித்​தார். அதற்​கான காலக்​கெடு விரை​வில் முடிவடைய உள்ள நிலை​யில் அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வ​தில் இந்​தி​யா தீவிரம்​ காட்​டி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x