Published : 30 Jun 2025 06:19 AM
Last Updated : 30 Jun 2025 06:19 AM

இந்தியாவின் தடை காரணமாக பாதிப்பு: பாகிஸ்தானில் சரக்கு கட்டணம் கடும் உயர்வு

புதுடெல்லி: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தானில் இருந்து வரும் அல்​லது ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களை இந்​திய துறை​முகங்​கள் வழி​யாக (கப்​பல் மூலம்) நேரடி​யாக​வும் மறை​முக​மாக​வும் கொண்டு செல்ல மத்​திய அரசு தடை விதித்​தது. இதனால் கடல்​சார் தளவாட போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது மட்​டுமல்​லாமல், விதி​மீறல்​களை கண்​டறிவதற்​கான சோதனை​களும் தீவிரப்​படுத்​தப்​பட்​டன.

இந்த நடவடிக்​கை​யின்​படி இது​வரை ரூ.9 கோடி மதிப்​புள்ள 1,100 டன் பொருட்​களை ஏற்​றிச் சென்ற 39 கன்​டெய்​னர்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக மத்​திய நிதி​யமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. பாகிஸ்​தானைச் சேர்ந்த பொருட்​கள் ஐக்​கிய அரபு அமீரக பொருட்​கள் என தவறாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது சோதனை​யில் தெரிய​வந்​தது.

இதுகுறித்து கராச்சி சேம்​பர் ஆப் காமர்ஸ் அன்ட் இண்​டஸ்ட்ரி தலை​வர் ஜாவேத் பில்​வானி கூறும்​போது, “இந்​தி​யா​வின் தடை​யால் பெரிய கப்​பல்​கள் பாகிஸ்​தானுக்கு வரு​வ​தில்​லை. இதனால் இறக்​கும​தி​யாளர்​கள் சிறிய கப்​பல்​களை நம்பி இருப்​ப​தால் சரக்கு போக்​கு​வரத்து செலவு அதி​கரித்​துள்​ளது. அத்​துடன் இறக்​குமதி 30 முதல் 50 நாட்​கள் வரை தாமத​மாகிறது.

இது​போல சரக்கு போக்​கு​வரத்து கட்​ட​ணம், குறிப்​பாக காப்​பீட்டு செலவு உயர்ந்​துள்​ள​தாக ஏற்​றும​தி​யாளர்​களும் தெரி​வித்​துள்​ளனர் என்​றார். மதிப்பு கூட்​டலுக்​காக, இறக்​குமதி செய்​யப்​பட்ட மூலப்​பொருட்​களை பெரிதும் நம்​பி​யுள்ள பாகிஸ்​தானின் ஏற்​றுமதி துறை இப்​போது கூடு​தல் செயல்​பாட்டு சிக்​கல்​களை எதிர்​கொள்​கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்​வாமா தாக்​குதலுக்கு பிறகு பாகிஸ்​தான் பொருட்​களுக்​கான இறக்​குமதி வரியை 200% ஆக மத்​திய அரசு அதி​கரித்​தது. அதன் பிறகு இருதரப்​பு வர்த்​தகம்​ குறைந்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x