Published : 21 Jun 2025 12:14 AM
Last Updated : 21 Jun 2025 12:14 AM

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் முதலீடு 3 மடங்காக அதிகரிப்பு

புதுடெல்லி: சு​விஸ் வங்​கி​யில் இந்​தி​யர்​கள் பதுக்​கும் பணத்​தின் அளவு கடந்த ஆண்டு 3 மடங்​காக அதி​கரித்​துள்ள தகவல் வெளி​யாகி உள்​ளது.

சர்​வ​தேச அளவில் சுவிட்​சர்​லாந்து நாடு சுற்​றுலா​வுக்கு புகழ்​பெற்​றுள்​ளது. அத்​துடன் பெரும் பணக்​காரர்​கள் விரும்​புவது சுவிஸ் வங்​கி​கள்​தான். சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​பவர்​களின் விவரங்​கள் வெளி​யிடப்​படு​வ​தில்​லை. அதுவே பணக்​காரர்​களுக்கு பாது​காப்​பாக கருதப்​படு​கிறது. அத்​துடன், கரன்​சி​யின் மதிப்பு குறைந்​தா​லும், பொருளா​தார நெருக்​கடி, அரசி​யல் ஸ்திரமற்ற நிலை ஏற்​பட்​டாலும், முதலீட்​டாளர்​களின் பணத்​துக்கு சுவிஸ் வங்​கி​கள் பாது​காப்பு வழங்​கு​கின்​றன. இது​போன்ற பல்​வேறு காரணங்​களால் அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர்.

அது​போல் இந்​திய பிரபலங்​கள் பலரும் சுவிஸ் வங்​கி​களில் கோடிக்​கணக்​கில் பணம் வைத்​துள்​ள​தாக​வும், இந்​தி​யா​வில் வரி ஏய்ப்பு செய்து கறுப்பு பணத்தை எல்​லாம் சுவிஸ் வங்​கி​களில் பதுக்கி வைப்​ப​தாக​வும் பல ஆண்​டு​களாக குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் சுவிஸ் தேசிய வங்கி வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில், கடந்த ஆண்டு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்​லியன் பிராங்க் (சு​விஸ் கரன்​சி) அளவுக்கு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​துள்​ளனர். இது இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.37,600 கோடி​யாகும். கடந்த 2021-ம் ஆண்​டுக்​குப் பிறகு இந்​தி​யர்​கள் செய்​துள்ள அதி​கபட்ச முதலீ​டாகும். அதே​நேரத்​தில் இந்​திய வாடிக்​கை​யாளர்​கள் தனி நபர்​களின் பெயர்​களில் உள்ள பணம் இந்​திய மதிப்​பில் ரூ.3,675 கோடி மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு சுவிஸ் தேசிய வங்கி ஆண்​டறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யர்​கள் பலர் வரி ஏய்ப்பு செய்​தும் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் மூல​மும் பெறும் கறுப்​புப் பணத்தை சுவிஸ் வங்​கி​களில் டெபாசிட் செய்து வரு​வ​தாக தொடர்ந்து குற்​றம் சாட்​டப்​பட்டு வரு​கிறது.

ஆனால், சுவிஸ் வங்​கி​யில் டெபாசிட் செய்​யப்​படும் பணம் அத்​தனை​யும் கறுப்​புப் பணம் இல்​லை. அதே​நேரத்​தில் வரி ஏய்ப்​பு​களுக்கு எதி​ராக இந்​தியா எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு ஆதரவு அளிப்​போம் என்று சுவிஸ் வங்கி நிர்​வாகம் கூறி​யுள்​ளது. இதுதொடர்​பான விவ​காரத்​தில் கடந்த 2018-ம் ஆண்​டில் இந்​தி​யா​வுக்​கும் சுவிட்​சர்​லாந்​துக்​கும் இடை​யில் தகவல் பரி​மாற்ற ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி, சுவிஸ் வங்​கி​களில் இந்​தி​யர்​கள் யார் யார் கணக்கு வைத்​துள்​ளனர். எவ்​வளவு பணம் டெபாசிட் செய்து வைத்​துள்​ளனர் என்ற விவரங்​களை இந்​திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்கி வரு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x