Published : 25 May 2025 12:26 AM
Last Updated : 25 May 2025 12:26 AM
நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்) வட்டிவிகிதம் 8.25 சதவீதமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்கள் பயன் பெறுவர்.
2022-23-ம் நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இது 2024-24-ம் நிதியாண்டு வரை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து 2024-25 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இது கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) அமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான (2025-26) பிஎஃப் வட்டி விகிதம் 8.25 சதவீதமாகவே தொடரும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
இபிஎஃப்ஓ அமைப்பின் மத்திய அறங்காவல் குழு (சிபிடி) இந்த முடிவு எடுத்துள்ளது. இதனால் பிஎஃப் சந்தா தொகையைச் செலுத்தி வரும் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர். இத்தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT