Last Updated : 16 May, 2025 01:05 PM

 

Published : 16 May 2025 01:05 PM
Last Updated : 16 May 2025 01:05 PM

மீண்டும் ஏறுமுகம்: தங்கம் பவுனுக்கு ரூ.880 உயர்வு

சென்னை: சென்னையில் நேற்று (மே.15) அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனையான 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.16) பவுனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது.

அந்த வகையில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலை​யில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.105 உயர்ந்​து, 8,855-க்கு விற்​பனை​யானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ.1,560 குறைந்து, ஒரு பவுன் ரூ.68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நீண்ட காலத்துக்குப் பின்னர் பவுன் ரூ.69,000-க்கும் கீழ் குறைந்தது. இது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இன்று (மே.16) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8720-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x