Published : 07 May 2025 09:36 PM
Last Updated : 07 May 2025 09:36 PM
சென்னை: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை மே 7 முதல் மே 14 வரை அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
மேலும், பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி அல்லது பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் எஸ்டிவி-599, பிவி-997 மற்றும் பிவி-2399 ஆகிய மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களில் 5 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும். அதோடு நீண்ட கால மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது:
பிவி-1499 இப்போது 365 நாட்கள் செல்லுபடியாகும் (கூடுதலாக 29 நாட்கள், 336 நாட்களில் இருந்து 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது). பிவி-1999 ரீசார்ஜ் பிளானின் செல்லுபடிக்காலம் 380 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. (கூடுதலாக 15 நாட்கள்) இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகைகள், தாய்மார்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் நீடித்த பிணைப்பு மற்றும் அன்பை போற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி மூலமாகவோ அல்லது https://portal.bsnl.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சில்லறை விற்பனையாளரின் மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT