Last Updated : 28 Apr, 2025 09:00 PM

 

Published : 28 Apr 2025 09:00 PM
Last Updated : 28 Apr 2025 09:00 PM

சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்!

சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (ஏப்.30) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அத்தினங்களில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சித்திரை மாதத்தின் மங்களகரமான தினமான ஏப்ரல் 30-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும். அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x