Published : 10 Apr 2025 08:20 AM
Last Updated : 10 Apr 2025 08:20 AM

இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: நிதின் காமத் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய பங்​குச்​சந்தை வீழ்ச்சி குறித்து ஜெரோதா நிறு​வனத்​தின் இணை நிறு​வனரும், தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான நிதின் காமத் நேற்று கூறிய​தாவது: கடந்த 5 ஆண்​டு​களில் சில்​லறை முதலீட்​டாளர்​கள் தொடர்ந்து இந்​தி​யப் பங்​கு​களை வாங்கி வந்​தனர். ஆனால் தற்​போது மிகப்​பெரிய அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யப் பங்​குச் சந்​தை​யில் ஏற்​படும் ஒரு பெரிய வீழ்ச்​சி​யானது, சில்​லறை முதலீட்​டாளர்​களை பல ஆண்​டு​களுக்கு பங்​குச் சந்​தைகளி​லிருந்து விலக்கி வைக்​கும்.

2008-ம் ஆண்​டில் பங்​குச் சந்​தை​யின் வீழ்ச்​சிக்கு பிறகு இதே நிலை​மை​தான் ஏற்​பட்​டது. 2008-ல் ஏற்​பட்ட மந்​தநிலை காரண​மாக மிகப்பெரிய அளவில் உலகில் பங்​குச் சந்​தைகள் கடும் சரிவைச் சந்​தித்​தன. அது​போன்று மீண்​டும் நடந்தால் சில்​லறை முதலீட்​டாளர்​கள் பல ஆண்​டு​களுக்கு பங்​குச் சந்​தையி​லிருந்து விலகி வெகு தூரம் சென்​று​விடு​வர். இவ்​வாறு நிதின் காமத் தெரி​வித்​தார்.

பொருளா​தார மந்​தநிலை காரண​மாக இந்​திய பங்​குச் சந்தை வரலாற்​றில் 2008-ம் ஆண்டு மிக​வும் மோச​மான அமைந்​தது. இந்​தி​யா​விலுள்ள முதலீட்​டாளர்​களுக்கு பெரு​மள​வில் நஷ்டம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் நீண்ட கால​மாக பங்​குச் சந்​தை​யின் பக்​கம் வரவே இல்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x