Published : 06 Apr 2025 01:14 AM
Last Updated : 06 Apr 2025 01:14 AM

அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு ஏழை மக்களை பாதிக்கும்: ஐ.நா. வர்த்தக அமைப்பு அதிருப்தி

நியூயார்க்: அமெரிக்க அதிப​ராக ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு, சீனா, கனடா, மெக்​சிகோ, இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு வரி விதிப்பை அதி​கரித்​துள்​ளார்.

எந்​தெந்த நாடு​கள் அமெரிக்கா​வுக்கு எவ்​வளவு வரி விதிக்​கின்​றனவோ அந்த அளவுக்கே பரஸ்​பரம் வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் உறு​தி​யாக கூறி​யுள்​ளார். இந்​நிலை​யில் ஐ.நா. வர்த்​தகம் மற்​றும் வளர்ச்​சிக்​கான அமைப்​பின் (யுஎன்​சிடிஏடி), செகரட்​டரி ஜெனரல் ரெபெக்கா கிரின்​ஸ்​பேன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறிய​தாவது: பல நாடு​களுக்கு அதிக வரி விதித்​துள்​ள​தால் உலகள​வில் வர்த்தக கொந்​தளிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் ஏழை மக்​கள்​தான் அதி​கம் பாதிக்​கப்​படு​வார்​கள்.

உலகளவி​லான வளர்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக்கு உரிய​தாக வர்த்​தகம் இருக்க வேண்​டும். இன்​றைய சவால்​களை பிர​திபலிக்​கும் வகை​யில் உலகளா​விய வர்த்தக விதி​கள் உரு​வாக வேண்​டும். ஏழை மக்​கள் பெரிதும் பாதிக்​காத வகை​யிலும் மேம்​பாட்டை கருத்​தில் கொண்​டும் வர்த்​தகம் அமைய வேண்​டும். இது ஒத்​துழைப்​புக்​கான நேரமே தவிர சிக்​கலை அதி​கரிப்​ப​தற்​கான நேரமல்ல. இவ்​வாறு ரெபெக்கா கிரின்​ஸ்​பேன்​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x