Published : 06 Mar 2025 01:26 AM
Last Updated : 06 Mar 2025 01:26 AM
சாதகமாற்ற சர்வதேச நிலவரங்களால் பங்குச் சந்தையில் நீடித்து வந்த சரிவுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சென்செக்ஸ் 740 புள்ளிகள் அதிகரித்து 73,730 ஆகவும், நிப்டி 254 புள்ளிகள் உயர்ந்து 22,337-ஆகவும் நிலைத்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக கொள்கை சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலும் ஆசிய சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
அதன் காரணமாக, நிப்டி 50-யில் மஹிந்திரா, பவர் கிரிட், எஸ்பிஐ, ஐசிஐசிஐ, அதானி எண்டர் பிரைசஸ் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. நிப்டி ஐடி 1.6%, ஆட்டோ 1.1%, வங்கி குறியீட்டெண் 0.3% ஏற்றம் பெற்றன.
1996-ம் ஆண்டு ஏப்ரலில் இருந்து நிப்டி 50 மீக நீண்ட சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, 2024 செப்டம்பரில் உச்சபட்சமாக 26,277 புள்ளிகளில் இருந்த நிப்டி குறியீடு தற்போது 16 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், 2008-09 உலகளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியுடன் ஒப்பிடும்போது தற்போது 6-வது முறையாகவும், கோவிட் காலமான 2020 மார்ச்சுடன் ஒப்பிடும்போது 2-வது முறையாகவும் பங்குச் சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளன.
நடப்பாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை பங்குகளில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT