Published : 18 Feb 2025 06:54 AM
Last Updated : 18 Feb 2025 06:54 AM

எம்எஸ்எம்இ கடன் உத்தரவாத திட்டத்தை அறிமுகம் செய்தார் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: எம்​எஸ்​எம்இ கடன் உத்தரவாத திட்​டத்தை நேற்று அறிமுகம் செய்த மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன், மூலதன செலவுக்கான இலக்கு 10.2% அதிகரிக்​கப்​பட்​டுள்ளதாக தெரி​வித்​தார்.

மத்திய பட்ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டபடி, மும்​பை​யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு​வனங்​களுக்கான (எம்​எஸ்​எம்இ) பரஸ்பர கடன் உத்தரவாத திட்​டத்தை மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் அறிமுகம் செய்​தார். அப்போது இந்த திட்​டத்​தின் கீழ் 11 பயனாளி​களுக்கு அனுமதி கடிதங்களை அவர் வழங்​கினார். இதன்​படி, எம்எஸ்​எம்இ நிறு​வனங்​கள், இயந்​திரங்கள் வாங்க ஈட்டுப் பிணையம் அல்லது மூன்​றாம் நபர் உத்தர​வாதம் இல்லாமல் ரூ.100 கோடி வரை கடன் பெற முடி​யும் என்று அவர் தெரி​வித்​தார்.

பின்னர் தொழில் துறை​யினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடைபெற்​றது. இதில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் கூறிய​தாவது: நாட்​டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் கடன் இடைவெளியை குறைக்க மத்திய அரசு முன்னுரிமை வழங்​கும். அதேநேரம் இதனால் அரசின் எந்த ஒரு திட்​ட​மும் பாதிக்​கப்​படாது. இதுவரை முலதன செலவில் கவனம் செலுத்திய அரசு வரும் நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் நுகர்வை அதிகரிக்க முக்​கி​யத்துவம் கொடுக்​கப்​பட்​டுள்ளது எனசிலர் கூறுவது தவறு. வரும் நிதியாண்​டில் நுகர்வை அதிகரிக்க வேண்​டும் என்பது அரசின் குறிக்​கோளாக உள்ளது. இதற்காக வருமான வரிச்சலுகை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் முலதன செலவு குறைந்​து​விடும் என கருதக்​கூடாது. வரும் ஆண்டில் மூலதன செலவுக்கான இலக்கு முந்தைய ஆண்டைவிட 10.2% அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 3 ஆண்டு​களில் தாக்கல் செய்​யப்​பட்ட மத்திய பட்ஜெட்​டில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறு​வனங்​களின் வர்த்தக சூழலை மேம்​படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்​கப்​பட்டன. வர்த்​தகம் செய்வதை எளிமை​யாக்கு​வதற்கான இணக்கம் தொடர்பான விதி​முறைகளை எளிதாக்க மாநில அரசுகள் முன்வர வேண்​டும். பட்ஜெட்​டில் இடம்​பெற்றுள்ள ஒவ்வொரு அம்ச​மும் குறித்த காலத்​தில் அமல்​படுத்​தப்பட வேண்​டும் என்ப​தில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
புதிய வருமான வரி மசோதா​வில் இடம்​பெற்றுள்ள அம்சங்கள் பற்றி நாடாளு​மன்ற தேர்​வுக் குழு ஆராயும். இந்த மசோதாவை உருவாக்குவது தொடர்பாக 60 ஆயிரம் பேர் இணைய​வழியில் கருத்து தெரி​வித்​திருந்​தனர். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

கடந்த சில மாதங்​களாக வெளி​நாட்டு முதலீட்​டாளர்கள் (எப்ஐஐ) இந்திய சந்தை​யில் பங்குகளை அதிக அளவில் விற்றுவருவது பற்றிய கேள்விக்கு, “முதலீட்​டாளர்​களுக்கு நல்ல லாபத்தை தரும் சந்​தையாக இந்தியா ​விளங்​கு​கிறது. அவர்​கள் இப்​போது பங்​குகளை ​விற்று லாபத்தை எடுத்​துச் செல்​கிறார்​கள்​” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x