Published : 02 Feb 2025 09:24 AM
Last Updated : 02 Feb 2025 09:24 AM

​வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பால் அரசுக்கு இழப்பு இல்லை!

புதுடெல்லி: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறிய​தாவது: மத்திய பட்ஜெட்​டில் புதிய வருமான வரி விகிதத்​தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்​தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்​தப்​பட்டு உள்ளது. இதன்​காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவா​யில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்​கூடும் என்று கணக்​கிடப்​பட்டு உள்ளது.

ஆனால் இந்த இழப்பு மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்​தாது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்​கப்​பட்டு இருப்​ப​தால் மக்கள் தாராளமாக செலவு செய்​வார்​கள். இதன்​காரணமாக ஜிஎஸ்டி வரி, சுங்க வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு போதிய வருவாய் கிடைத்து​விடும்.

நாட்​டின் மக்கள் தொகை​யில் சுமார் 85 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்​துக்​குள்​ளேயே வருவாய் ஈட்டு​கின்​றனர். புதிய வரி விகிதத்​தால் அவர்கள் பலன் அடைவார்​கள். சம்பள​தா​ரர்கள் அதிகபட்​சமாக ஓராண்​டில் ரூ.60,000 வரை சேமிக்க முடி​யும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிப்பு கிடைக்​கிறது என்றால் அவர் நிச்​சயமாக ரூ.8,000 வரை செலவு செய்​வார். இதன்​மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்​கும்​.மேலும் புதிய வரி விகிதத்​தால் வாகன விற்​பனை, ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமாக வளர்ச்சி அடையும்.

நாடு முழு​வதும் ஒரே வருமான வரி விகிதமே நடைமுறை​யில் இருக்க வேண்​டும் என்று மத்திய அரசு விரும்​பு​கிறது. தற்போது நடைமுறை​யில் இருக்​கும் பழைய வரி விகிதம் நிச்​சயமாக ஒரு​நாள் ரத்து செய்​யப்​படும். இவ்​வாறு நி​தித் துறை நிபுணர்​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x