Last Updated : 28 Jan, 2025 07:56 PM

1  

Published : 28 Jan 2025 07:56 PM
Last Updated : 28 Jan 2025 07:56 PM

தமிழகத்தில் ஜன.29, ஜன.31-ல் பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்!

சென்னை: பத்திரப்பதிவுக்கு ஜன.29 (நாளை) மற்றும் ஜன.31 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகிறது. தற்போது தை அமாவாசை நாளான ஜன.29-ம் தேதி மற்றும் தை மாதத்தின் மங்களகரமான தினமான ஜன.31-ம் தேதி ஆகிய நாட்களில் அதிகளவில் பதிவுகள் நடைபெறும் என்பதால், கூடுதலான டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று ஜன.29 மற்றும் 31-ம் தேதி ஆகிய நாட்களில், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x