Published : 25 Jan 2025 04:05 PM
Last Updated : 25 Jan 2025 04:05 PM

காஞ்சிபுரம் ஜரிகை ஆலை பொலிவுடன் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

காஞ்​சிபுரத்​தில் இயங்​கும் தமிழ்​நாடு ஜரிகை ஆலை பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி தெரி​வித்​துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஜன.22-ம்தேதி​யிட்ட இதழில் பொலிவை இழக்​கும் ஜரிகை உற்பத்தி: ஆலையை மீட்க என்ன வழி? என்ற தலைப்​பில் செய்தி வெளி​யாகி இருந்​தது. அது தொடர்பாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.​காந்தி அளித்​துள்ள விளக்க கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்நாடு ஜரிகை லிமிடெட் காஞ்​சிபுரத்​தில் 1974-ம் ஆண்டு முதல் செயல்​பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்​யப்​படும் ஜரிகை மார்க் (242 கிராம்) விலை தற்போது ரூ.23,075-க்கு விற்​கப்​படு​கிறது. இதன் விலை நாள் தோறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை​யில் ஏற்படும் மாற்​றத்​துக்​கேற்ப விலை நிர்​ணயம் செய்​யப்​பட்டு வருகிறது.

பத்திரிகை செய்தி​யில் இடம்​பெற்றுள்ள ‘வளர்ந்து வரும் தொழில்​நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்பு​களுக்கு ஏற்ப இந்த ஆலை மேம்​படுத்​தப்​பட​வில்லை’ என்ற குற்​றச்​சாட்டு உண்மைக்கு புறம்​பானது. ஜரிகை ஆலையில் மொத்தம் 6 தங்க முலாம் பூசும் இயந்​திரங்கள் நிறு​வப்​பட்​டுள்ளன. ஆலையின் உற்பத்தி திறனை பெருக்க, இந்த அரசு பொறுப்​பேற்ற பின்னர், மேம்​படுத்​தப்​பட்ட தொழில்​நுட்​பத்​துடன் கூடிய 3 நவீன இயந்​திரங்கள் வாங்​கப்​பட்​டுள்ளன.

கடந்த 4 ஆண்டு​களில் தங்கம் விலை 38.24 சதவீதம், வெள்ளி விலை 34.28 சதவீதம் உயர்ந்​துள்ளது. அதனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்​களின் ஜரிகை கொள்​முதல் குறைந்​துள்ளது. ஜரிகை விலை உயர்​வால், நெசவாளர்கள் உற்பத்தி செய்​யும் பட்டு சேலை விலை உயர்ந்து, அதன் மூலம் பட்டு சேலை விற்பனை நாளடை​வில் குறைந்து வருகிறது. ஆலையில் ஆரம்ப காலம் முதல் தங்க​முலாம் பூச்சு பிரி​வில், தேவையான ரசாயனங்கள் சூரத் விற்​பனை​யாளர்​களிட​மிருந்து பெறப்​பட்​டது.

இத்தொழில்​நுட்​பத்​துக்கு சூரத் விற்​பனை​யாளர்​களையே முழு​வதுமாக சார்ந்​திருப்பதை தவிர்க்க அண்ணா பல்கலைக்கழக டெக்ஸ்​டைல் தொழில்​நுட்ப வல்லுநர்கள் உதவி​யுடன் தங்க முலாம் பூச்சு பிரிவுக்கு தேவையான ரசாயனங்கள் ஆலையிலேயே தயாரித்து தன்னிறைவு பெற்றுள்​ளது. பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்​குவது போல், ஜரிகை மார்க்கொள்​முதல் செய்​யும்​போது, தேசிய கைத்தறி வளர்ச்சி திட்​டத்​தின் கீழ் 15 சதவீத மானியம் வழங்க, மத்திய அரசுக்கு முன்​மொழிவு சமர்ப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால் மத்திய அரசால் கொள்கை அளவில் ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை.

இந்த அரசு பொறுப்​பேற்​றவுடன் ஆலையில் பணிபுரி​யும் தொழிலா​ளர்​களுக்கு 2023-ம் ஆண்டு நவ.24 முதல் ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே ஆண்டு டிச.28-ம் தேதி ரூ.1.41 கோடி​யில் புனரமைக்​கப்​பட்ட ஆலை திறக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, இந்த அரசு ​முன்னெடுத்து செயல்​படுத்​தப்​பட்ட பல்​வேறு நட​வடிக்கைகளால் தமிழ்​நாடு ஜரிகை ஆலை, பொலிவுடன் சிறப்பாக செயல்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு கடிதத்​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x