Published : 24 Jan 2025 06:09 AM
Last Updated : 24 Jan 2025 06:09 AM

சென்னையில் ஜன.25-ல் உலக தொழில்முனைவோர் விழா: 3,000+ நிபுணர்கள் பங்கேற்பு

சென்னை: உல​கின் பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் பங்கேற்​கும் உலக தொழில்​முனை​வோர் விழா சென்னை​யில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை ஃப்ரீலேன்​ஸர்ஸ் கிளப் மற்றும் மேக்​கர்ஸ் ட்ரைப் சார்​பில், தரமணி​யில் உள்ள ஐஐடி ஆராய்ச்​சிப் பூங்​கா​வில் இவ்விழா பிரம்​மாண்​டமாக நடைபெற உள்ளது. சர்வதேச அளவிலான தொழில்​முனை​வோர், புத்​தொழில் நிறு​வனத்​தினர், நிபுணர்​கள், கண்டு​பிடிப்​பாளர்கள் ஆகியோரைக் கொண்​டாடும் வகையில் இந்த விழா நடத்​தப்​படு​கிறது.

இதில், பல்வேறு நாடு​களில் இருந்து 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழில்​முனை​வோர், புதுமை கண்டு​பிடிப்​பாளர்​கள், புத்​தொழில் நிறு​வனத்​தினர் (ஸ்டார்ட்​-அப்) பங்கேற்​கின்​றனர். விழா​வில், கலந்​துரை​யாடல், மாநாடு, கருத்​தரங்​கம், பயிலரங்​கம், கண்காட்சி, சிறந்த தொழில்​முனை​வோருக்கு விருது வழங்​குதல் என பல்வேறு நிகழ்வுகள் இடம்​பெறுகின்றன. மேலும், 100-க்​கும் மேற்​பட்ட நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர்.

கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி: தொழில்​துறை​யின் புதிய கண்டு​பிடிப்புகளை காட்​சிப்​படுத்​தும் வகையில் 100-க்​கும் மேற்​பட்ட அரங்​குகள் கொண்ட கண்காட்​சி​யும் நடைபெறுகிறது. கருத்​தரங்கம் மற்றும் பயிலரங்​கு​களில் தொழில் மேம்​பாடு, திறன் மேம்​பாடு தொடர்பான அமர்​வுகள் இடம்​பெறும். தொழில்​முனை​வில் சிறந்து ​விளங்​கு​வோருக்கு பல்​வேறு பிரிவு​களில் 25 ​விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x