Last Updated : 22 Jan, 2025 04:16 PM

 

Published : 22 Jan 2025 04:16 PM
Last Updated : 22 Jan 2025 04:16 PM

பொலிவை இழக்கும் ஜரிகை உற்பத்தி: காஞ்சி ஆலையை மீட்க என்ன வழி?

ஓரிக்கை ஜரிகை உற்பத்தி தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள்.

​காஞ்​சிபுரத்​தில் பட்டு நெசவுத் தொழிலை நம்பி 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்கள் உள்ளனர். இவர்​களின் நலன் கருதி கைத்தறி சங்கங்களை தோற்று​வித்​தவர் சுதந்திர போராட்டத் தியாகி கே.எஸ்​.பார்த்​தசா​ரதி. இவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்​கப்​படும் பட்டுச் சேலைகளுக்கான ஜரிகையை சூரத் பகுதி​யில் இருந்தே வாங்க வேண்டி இருப்​ப​தால் அந்த ஜரிகையை தயாரிக்​கும் தொழிற்​சாலையை தமிழக அரசே நிறுவ வேண்​டும் என்று அப்போது முதல்​வராக இருந்த அண்ணா​விடம் கோரிக்கை வைத்​தார். அண்ணா அதற்கான நடவடிக்கைகளை எடுத்​தார்.

ஆனாலும் எம்ஜிஆர் ஆட்சிகாலத்​தில் 1971-ம் ஆண்டு​தான் இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலை காஞ்​சிபுரம் ஓரிக்கை​யில் தொடங்​கப்​பட்​டது. தமிழக அரசால் தொடங்​கப்​பட்டு தற்போதுவரை நடத்​தப்​படும் ஒரே ஜரிகை உற்பத்தி நிறு​வனம் இது என்பது குறிப்​பிடத்​தக்​கது.

இந்த ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலை முதலில் 3,000 ஆயிரம் மார்க் ஜரிகை உற்பத்தி செய்​யும் அளவுக்​கு​தான் தொடங்​கப்​பட்​டது. பின்னர் ஜரிகைக்கான தேவை அதிகரித்​ததை தொடர்ந்து 8 ஆயிரம் மார்க்காக உற்பத்தி அளவு உயர்த்​தப்​பட்​டது. இங்கு ஒரு மார்க் என்பது 242 கிராம் ஜரிகை அளவை குறிக்​கும். கடந்த 20 ஆண்டு​களுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபம் ஈட்டும் தொழிற்​சாலையாக இந்த ஜரிகை தொழிற்​சாலை வளர்ந்​திருந்​தது.

ஆனால் கடந்த சில ஆண்டு​களாக இந்த ஆலையின் ஜரிகை விற்​பனை​யில் கடும் சரிவு ஏற்பட்​டுள்​ளது. கூட்டுறவு நிறு​வனங்கள் தாங்கள் உற்பத்தி செய்​யும் பட்டு ஆலைகளில் கண்டிப்பாக 60 சதவீதம் இந்த ஜரிகையை பயன்​படுத்த வேண்​டும் என்று உத்தர​விட்டும் இதன் உற்பத்தி தற்போது 3000 ஆயிரம் மார்க்காக குறைக்​கப்​பட்டு​விட்​டது. இந்தத் தொழிற்சாலை​யில் பணிசெய்​யும் தொழிலா​ளர்கள் எண்ணிக்கை​யும் தற்போது 150-ல் இருந்து 60-ஆக குறைந்​து​விட்​டது.

வளர்ந்து வரும் தொழில்​நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்பு​களுக்கு ஏற்ப இந்த நிறு​வனம் மேம்​படுத்​தப்​பட​வில்லை என்ற குற்​றச்​சாட்டு​கள் ஒருபுறம் இருந்​தா​லும், கூட்டுறவு சங்கங்​களின் பட்டுச் சேலை விற்​பனை​யில் ஏற்பட்ட சரிவு இந்த ஜரிகை தொழிற்​சாலை​யை​யும் பாதித்​திருப்​பதாக பல்வேறு தரப்​பினர் தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து கே.எஸ்​.பார்த்​தசாரதி நெசவாளர் சங்கத்​தின் தலைவர் ஜெ.கமலநாதனிடம் கேட்​ட​போது அவர் கூறியது: ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யின் ஜரிகை உற்பத்தி குறைந்​ததற்கு தொழில்நுட்பக் குறைபாடு​களைத் தாண்டி ஜரிகைக்கான தேவை குறைந்தது ஒரு முக்கிய காரணம்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் இயங்கும் ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை.

பட்டு கூட்டுறவு சங்கங்கள் கண்டிப்பாக இந்த ஜரிகை ஆலையின் ஜரிகையை 60 சதவீதம் பயன்​படுத்த வேண்​டும் என்ற அரசு உத்தரவு இருப்​ப​தால்​தான் இந்த அளவுக்கு கூட உற்பத்தி நடைபெறுகிறது. இந்த நிறு​வனம் தயாரிக்​கும் ஒரிஜினல் ஜரிகை​யில் 0.5 சதவீதம் தங்க​மும், 40 சதவீதம் வெள்​ளி​யும், 35.5 சதவீதம் காப்​பரும், 24 சதவீதம் பட்டு இழையும் இருக்​கும்.

இதன் விலை ஒரு மார்க் 26 ஆயிரத்தை தாண்டி விற்​கிறது. தங்கம், வெள்ளி விலை​யேற்றம் காரணமாக இதன் விலை அதிகரித்​துள்ளது. சூரத்​தில் இருந்து கிடைக்​கும் ஜரிகை இந்த நிறு​வனத்​தின் ஜரிகை​யைவிட சுமார் ரூ.600 மட்டுமே குறைவாக கிடைக்​கிறது. ஆனால் தனியார் யாரும் இந்த நிறு​வனத்​தின் ஜரிகைகளை வாங்​கு​வ​தில்லை. காஞ்​சிபுரம் பட்டு என்ற பெயரில் குறைந்த விலை ஜரிகைகளை வாங்கி சேலைகளை​யும் குறைந்த விலைக்கு விற்​கின்​றனர்.

அவர்கள் விற்​கும் சேலைகளில் பயன்​படுத்​தும் ஜரிகை​யில் இந்த அளவுக்கு தங்கம், வெள்ளி இருக்​காது. திரு​மணத்​துக்கு 10 சேலை எடுப்​பவர்கள் கூட முகூர்த்த சேலையை மட்டுமே கூட்டுறவு சங்கங்​களில் எடுக்​கின்​றனர். விலை குறைவாக இருப்​ப​தால் மற்ற சேலைகளை தனியார் கடைகளில் எடுக்​கின்​றனர். தங்கம், வெள்ளி விலை​யேற்​றத்​தால் ஜரிகை விலை ஏறியது, இதனால் பட்டுச் சேலை விலை​ ஏறியதும் விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.

பட்டுச் சேலை விற்பனை சரிந்​த​தால் ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யிலும் உற்பத்தி சரிந்​து​விட்​டது. தற்போது பட்டு நூலுக்கு 15 சதவீதம் அரசு மானியம் வழங்​கு​கிறது. அதேபோல் அரசு நிறு​வனமான ஓரிக்கை ஜரிகை நிறு​வனத்​தில் கொள்​முதல் செய்​யப்​படும் ஜரிகைக்​கும் அரசு மானியம் வழங்​கினால் ஜரிகை உற்பத்தி தொழிற்​சாலையை மீட்க முடியும் என்றார்.

இதுகுறித்து கைத்தறி துணை இயக்​குநர் அலுவல​கத்​தில் சிலரிடம் கேட்​ட​போது, ஓரிக்கை ஜரிகை தொழிற்​சாலை​யிடம் இருந்து சேலை உற்பத்​திக்கு தகுந்​தாற்​போல் எவ்வளவு தேவையோ அந்த அளவுக்​கு​தான் ஜரிகை வாங்கி இருப்பு வைக்க முடி​யும். விற்பனை குறைந்​த​தால் உற்பத்​தி​யும் குறைந்​து​விட்​டது.

ஓரளவுக்கு மேல் மத்திய கூட்டுறவு வங்​கி​களில் கடன் பெற்று ஜரிகை வாங்கி வைக்க ​முடி​யாது. தேங்​கிக் கிடக்​கும் சேலைக்கு ​மானி​யம், ஜரி​கைக்கு ​மானி​யம் ஆகியவை வழங்​கினால்​தான் சேலை உற்​பத்​தியை அதிகரிக்க ​முடி​யும். அப்​போது​தான் கூடு​தல் ஜரிகையை கூட்​டுறவு நிறுவனங்​கள்​ வாங்​க ​முடி​யும்​ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x