Published : 02 Sep 2024 05:12 AM
Last Updated : 02 Sep 2024 05:12 AM

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை சரிவு

சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.20, தக்காளி ரூ.12 ஆக குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கினாலும் கடந்த ஆகஸ்ட் மாதம்தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் தீவிரமடைந்தது.

இந்த சூழலில் தற்போது கோயம்பேடு சந்தைக்குகாய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் ரூ.5 ஆக விலைவீழ்ச்சி அடைந்துள்ளது.

கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பீட்ரூட், முள்ளங்கி, புடலங்காய் ஆகியவை தலா ரூ.10-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் ரூ.30 ஆக குறைந்திருந்த சாம்பார் வெங்காயம், தற்போது கிலோ ரூ.20க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விலை ரூ.12 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x