Published : 14 Aug 2014 12:00 AM
Last Updated : 14 Aug 2014 12:00 AM

அஜய் பிரமள் - இவரைத் தெரியுமா?

• 100 நாடுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் பிரமள் குழுமத்தில் தலைவர். இந்தியா வென்ச்சர் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். கல்விக்காக செயல்பட்டுவரும் என்.ஜி.ஓ.வான பிரதாம் இந்தியாவின் தலைவர்.

• 29-வது வயதில் தன்னுடைய குடும்பத் தொழிலான ஜவுளித் தொழிலுக்கு வந்தார். 1980களில் ஜவுளித் தொழிலை விட்டு வெளியேறி பார்மா துறைக்கு வந்தார். இத்தனைக்கும் அப்போது இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவந்தன.

• 2010ம் ஆண்டு இவரது ஜெனரிக் வியாபாரத்தை 372 கோடி டாலருக்கு அபோட் (abott) நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்.

• இதில் கிடைத்த தொகையை கொண்டு வோடபோன் நிறுவனத்தின் 11 சதவீத பங்குகளை வாங்கினார். பின்னர் அதிலிருந்து முழுமையாக வெளியேறினார்

• கடந்த மே மாதத்திலிருந்து ஸ்ரீராம் கேபிடல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வருகிறார். விரைவில் அந்த குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

• ஜம்னாலால் பஜாஜ் நிர்வாகக் கல்லூரியில் மேலாண்மை துறையில் முதுகலைபட்டம் பெற்றவர். ஹார்வேர்ட் பிஸினஸ் கல்லூரி தலைவருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினரும் கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x